நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
Published on: November 27, 2024 at 12:07 pm
Updated on: November 27, 2024 at 1:26 pm
Parliament Winter Session | நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி துவங்கியது. அப்போது அனைத்து கட்சி குழுவின் பரிசீலனையில் உள்ள வக்பு திருத்த மசோதா, மணிப்பூர் வன்முறை, அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமலில் ஈடுபட்டன. இதனால் மக்களவை மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றம் இன்று மீண்டும் தொடங்கியது.
இன்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமலில் ஈடுபட்ட நிலையில் மாநிலங்களவை காலை 11:30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து அதானி விவகாரம் குறித்து பேச வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமலில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை மீண்டும் தொடங்கிய நிலையில் எதிர்கட்சிகள் மீண்டும் கூச்சலில் ஈடுபட்டனர். தொடர் அமளி காரணமாக அவை தலைவர் ஜெகதீப் தங்கார், அவை சீராக இயங்கவில்லை என கூறி, நாள் முழுவதும் அவையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.இதனால், அவை மீண்டும் நாளை காலை 11 மணிக்கு கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க மகாராஷ்டிரா புதிய முதலமைச்சர் யார்? டிச.2 பதவியேற்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com