உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது.
உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது.
Published on: November 27, 2024 at 11:28 am
World Chess Championship 2024 | உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. நவம்பர் 25 ஆம் தேதி துவங்கிய இந்த தொடர் டிசம்பர் 3 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான இந்த போட்டியில் 14 சுற்றுகள் உள்ளன. வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு புள்ளியும் டிராவிற்கு அரைப்புள்ளியும் வழங்கப்படும்.
இந்த போட்டியில் முதலில் 7.5 புள்ளிகளை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்குவார். இந்நிலையில் குகேஷ் முதல் சுற்றில் 42வது நகர்த்தலின்போது தோல்வியை தழுவினார். இந்த நிலையில் நேற்று நடந்த இரண்டாவது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் மற்றும் டிங் லிரென் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.
இதனால் இரண்டாவது சுற்று முடிவில் டின் லிரன் 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் முன்னணியில் உள்ளார். நேற்றைய விளையாட்டிற்கு பிறகு 18 வயது தமிழக வீரரான குகேஷ் கூறுகையில், இன்றைய நாள் எனக்கு நல்ல விதமாக அமைந்தது. இதுபோன்று மேலும் பல நாட்கள் வரும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மூன்றாவது சுற்று போட்டி நடைபெற உள்ளது. இதில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் ஆடுகிறார்.
இதையும் படிங்க மேடை ஏறி வாறோம் ஒதுங்கி நில்லு: மீண்டும் முதலிடத்தில் இந்தியா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com