இந்தியா வரும் இங்கிலாந்து மன்னர், ராணி: எந்தெந்த நாடுகளுக்கு செல்கிறார்கள் தெரியுமா?

புற்றுநோயிலிருந்து விடுபட்டுவரும் இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசும், ராணி ராணி கமிலாவும் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published on: November 24, 2024 at 2:03 pm

England King India Visit | இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசும், ராணி கமிலாவும் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

அந்த ஊடக செய்தியில், “மன்னர் மற்றும் ராணியின் இந்திய துணைக்கண்ட சுற்றுப்பயண திட்டம் தயாராக உள்ளதாகவும், இது உலக அரங்கில் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய அரசியல் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மன்னர் மற்றும் ராணிக்கு இது போன்ற திட்டங்களை உருவாக்க முடிவது மிகவும் ஊக்கமளிக்கிறது. இது அவர்களுக்கு மிகவும் உற்சாகமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்துக்கும் செல்வதாக அதில் கூறப்பட்டு உள்ளது.

முன்னதாக, மன்னரும் ராணியும் இந்தியா வர திட்டமிட்டிருந்த நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணம் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க ஆஸ்திரேலியா ; 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை ; வந்தது புதிய சட்டம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com