Pakistan train hijack: பாகிஸ்தான் ரயில் கடத்தலுக்குப் பின்னால் உள்ள பயங்கரவாதக் குழுவான பலூச் விடுதலைப் இராணுவத்தினர் யார் தெரியுமா?
Pakistan train hijack: பாகிஸ்தான் ரயில் கடத்தலுக்குப் பின்னால் உள்ள பயங்கரவாதக் குழுவான பலூச் விடுதலைப் இராணுவத்தினர் யார் தெரியுமா?
Published on: March 11, 2025 at 7:45 pm
Baloch Liberation Army: இஸ்லாமாபாத், மார்ச் 11, 2025: பாகிஸ்தானில் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில், பிரிவினைவாத குழுக்களில் ஒன்றான பலூச் விடுதலை இராணுவம் (BLA) மிகவும் வலிமையான ஒன்றாக கருதப்படுகிறது.
கடந்த காலங்களில், பாதுகாப்புப் படைகள், உள்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை குறிவைத்து தொடர்ச்சியான உயர்மட்ட தாக்குதல்களுக்கு இந்தக் குழு பொறுப்பு ஏற்றுள்ளது.
இந்த நிலையில், இன்று (மார்ச் 11, 2025) பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டாவிலிருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்குச் செல்லும் பயணிகள் ரயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
போராளிகள் இந்த ரயிலைக் கடத்திச் சென்று, 400க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துள்ளனர்.
மேலும், குறைந்தது 6 வீரர்களைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்த இயக்கம் அமெரிக்கா உட்பட பல நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் வளங்கள் நிறைந்த மாகாணமான பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதே இந்த லூச் விடுதலை இராணுவத்தின் கோரிக்கை ஆகும்.
இது மட்டுமின்றி பாகிஸ்தானில் உள்ள இனக் கிளர்ச்சி குழுக்களில் இது பெரியது ஆகும்.
பாகிஸ்தான் ரயில் கடத்தல் (Pakistan train hijack)
பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவிலிருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு ஒன்பது பெட்டிகளில் சுமார் 400 பயணிகளுடன் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில்தான் கடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பலூச் விடுதலை இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில், எந்தவொரு இராணுவ ஊடுருவலுக்கும் சமமான வலுவான பதிலடி வழங்கப்படும். இதுவரை, 6 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கான பயணிகள் பலூச் விடுதலை ராணுவ (பி.எல்.ஏ) காவலில் உள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பலூச் விடுதலை இராணுவம் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்.. 9 பேர் படுகொலை.. 6 பயங்கரவாதிகள் செயலிழப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com