நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் கமாண்டர் உயிரிழப்பு.. டொனால்ட் ட்ரம்ப்

Abu-Bilal al-Minuki : ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஐ.எஸ்.ஐ.எஸ் கமாண்டர் உயிரிழந்தார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Published on: May 16, 2026 at 5:36 pm

நியூயார்க், மே 16, 2026: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததன்படி, நைஜீரியாவில் நடந்த கூட்டு இராணுவ நடவடிக்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் உலகளாவிய இரண்டாம் நிலைத் தலைவராகக் கருதப்பட்ட அபூ-பிலால் அல்-மினுகி கொல்லப்பட்டார். இந்த நடவடிக்கை, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் சர்வதேச வலையமைப்பை பலவீனப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

அதாவது, அமெரிக்க மற்றும் நைஜீரிய இராணுவம் இணைந்து மேற்கொண்ட துல்லியமான தாக்குதல் மூலம் அபூ-பிலால் அல்-மினுகி கொல்லப்பட்டார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதனை, “இது மிகக் கடினமான, நுணுக்கமாக திட்டமிடப்பட்ட நடவடிக்கை” என்று குறிப்பிட்டார்.

அல்-மினுகி பின்னணி

அல்-மினுகி, 1982-ஆம் ஆண்டு நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் பிறந்தவர். இவர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், 2023-இல் அமெரிக்கா அவரை “உலகளாவிய பயங்கரவாதி” என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : காங்கோ நாட்டில் புதிய எபோலா பரவல் உறுதி.. உலக நாடுகள் அதிர்ச்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com