Indian shot dead in Canada: கனடாவில் 20 வயதான சீக்கிய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
Indian shot dead in Canada: கனடாவில் 20 வயதான சீக்கிய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
Published on: December 8, 2024 at 7:55 pm
Indian shot dead in Canada | கனடா நாட்டின் எட்மண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாவலர் ஆக பணியாற்றி வந்த 20 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஷந்தீப் சிங் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, ஈவன் ரெய்ன் மற்றும் சுடித் சால்டிக்ஸ் என்ற 30 வயதான இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசாரின் கூற்றுப்படி, ”எட்மண்ட் பகுதியின் 106வது தெரு மற்றும் 107வது அவென்யூவின் சம்பவத்தன்று இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று, குடியிருப்பின் படிக்கட்டில் பிணமாக கிடந்த ஹர்ஷந்தீப் சிங் உடலை கைப்பற்றினார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com