Gujarat woman shot in US: அமெரிக்காவில் குஜராத் பெண்ணை சுட்டுக்கொன்ற 21 வயது குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
Gujarat woman shot in US: அமெரிக்காவில் குஜராத் பெண்ணை சுட்டுக்கொன்ற 21 வயது குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
Published on: September 21, 2025 at 11:19 am
நியூயார்க், செப்.21, 2025: அமெரிக்க நாட்டின் தென் கரோலினாவில் குஜராத்தி பெண் ஒருவரைக் கொன்ற வழக்கில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் செப்டம்பர் 16 தேதியன்று நடந்துள்ளது. அன்றைய தினம் கிரண் படேல் கொல்லப்பட்டது உட்பட இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக 21 வயதான ஜைடன் மேக் ஹில் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
இது தொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தியின் படி, “49 வயதான கிரண் படேல், டிடியின் ஃபுட் மார்ட்டின் வாகன நிறுத்துமிடத்தில் சுடப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த படேல், செவ்வாயன்று ஜைடன் மேக் ஹில் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதாவது, கிரண் படேல் யூனியன் கவுண்டியில் தான் நிர்வகித்து வந்த பெட்ரோல் பங்க் மற்றும் கன்வீனியன்ஸ் கடையின் பதிவேட்டில் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்தது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : ஹெச்.1 பி விசா ரூ.90 லட்சம்? ட்ரம்ப் அடுத்த மூவ்.. இந்தியர்களுக்கு சிக்கல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com