Canada | கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அக்.28ஆம் தேதிக்குள் பதவி விலக அந்நாட்டு எம்.பி.க்கள் கெடு விதித்துள்ளனர்.
Canada | கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அக்.28ஆம் தேதிக்குள் பதவி விலக அந்நாட்டு எம்.பி.க்கள் கெடு விதித்துள்ளனர்.
Published on: October 24, 2024 at 9:19 pm
Canada | கனடா மண்ணில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொன்றதில் இந்தியாவின் தொடர்புக்கு உறுதியான ஆதாரம் இல்லை. இந்த விவகாரத்திற்கு அவர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என அவரது சொந்தக் கட்சி எம்.பி.க்கள் கெடு விதித்துள்ளனர்.
அதாவது, அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பெரும்பான்மையான எம்.பி.க்கள் ட்ரூடோவுக்கு அக்டோபர் 28 ஆம் தேதி வரை காலக்கெடுவைக் கொடுத்துள்ளனர்.
“நீங்கள் தலைவராக நீடிக்க வேண்டுமா” எனவும் எம்.பி.க்கள் கேள்வியெழுப்பியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ட்ரூடோ ஒரு சிறுபான்மை அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவதாக இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், காலிஸ்தான் ஆதரவு சக்திகள் அவரை இந்தியாவுக்கு எதிராக பேச வற்புறுத்துவதால் வரும் நாட்களில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மேலும் பதற்றம் ஏற்படும் என்றும் எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், “கனடா நாடாளுமன்றம் காலிஸ்தான் ஆதரவாளர்களால் நிரம்பியுள்ளது. அவர்கள் ட்ரூடோவை வழிநடத்துகின்றனர். சில தனிநபர்கள் கொடுத்த உளவுத்துறையின் அடிப்படையில் ஒரு பிரதமர் எப்படி ஒரு கொலைக்கு ஒரு நாட்டின் பெயரைச் சொல்லி குற்றம் சாட்ட முடியும்?
ட்ரூடோவின் நடத்தை ஒரு பொறுப்பான பிரதமரைப் போல் இல்லை. மேலும் அவர் இரு நாடுகளுக்கு இடையிலான உறவைக் கெடுத்துவிட்டார்” என்றும் எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க இந்தியா-கனடா உறவை சிதைத்த ஜஸ்டின்: தூதர் குற்றச்சாட்டு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com