Pakistan | பாகிஸ்தானில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.
Pakistan | பாகிஸ்தானில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.
Published on: October 26, 2024 at 9:51 pm
Pakistan | 2021-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மற்றும் பலுசிஸ்தான் போன்ற மாகாணங்களில் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் வாரிஸ்தான் மாவட்டத்தில், ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள மிர் அலி டெசில் பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றுள்ளது. காவல்துறை வாகனங்களை குறிவைத்து, பயங்கரவாதிகள் உடலில் வெடிகுண்டுகளை அணிந்து தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 4 போலீசார், 2 ராணுவ வீரர்கள், 2 பொதுமக்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க திடீர் திருப்பம்; போர் கைதிகளை மாற்றிக் கொண்ட ரஷ்யா- உக்ரைன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com