Suicide attack in Pakistan | பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் மாலிகேல் பகுதியில் ராணுவ வீரர்களின் சோதனை சாவடி மீது வாகனம் ஒன்று திடீரென வந்து மோதியது. பின்னர் அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டை தற்கொலை படையினர் வெடிகச் செய்தனர்.
இந்த தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய அதே பகுதியில் மேலும் எட்டு பேர் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்மி ஸ்கூல் பகதூர் ஆயுத குழு பொறுப்பேற்றுள்ளது. தற்கொலை படை தாக்குதலுக்கு பிரதமர் ஷபாஷ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரபடுத்துமாறு ராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க பாகிஸ்தான் :பஞ்சாப் கல்வி நிலையங்களுக்கு 24-ஆம் தேதி வரை விடுமுறை
Indian illegal migration to US falls : அமெரிக்காவில் இந்தியர்கள் சட்டவிரோத குடியேற்றம் 69 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது….
Hormuz Attack: ஹோர்முஸ் நீரிணையில் UAE-க்கு சொந்தமான இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது நடந்ததாகக் கூறப்படும் ஈரானிய ஏவுகணை தாக்குதலில் ஒரு இந்திய கடற்படை ஊழியர்…
UNSC 2028 : 2028-29 காலகட்டத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் தேர்தல் பிரசாரத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் நியூயார்க்…
Hormuz Strait : குவைத், ஜோர்டான், பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது; இது வளைகுடா நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்