Thisayanvilai: திசையன்விளை அருகே இளைஞர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
Thisayanvilai: திசையன்விளை அருகே இளைஞர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
Published on: February 13, 2025 at 11:34 am
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை, மகாதேவன்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் (27) என்பவர் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார் என்று புகார்கள் எழுந்தன. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கெளரி மனோகரி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து, சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதற்காக ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை (பிப்.1,.2025) கைது செய்தார். தொடர்ந்து, ஆறுமுகத்தை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வழக்கில் இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க : கோவையில் பரபரப்பு.. 2 பெண்களை துரத்திய இளைஞர்.. செக்யூரிட்டி மீது தாக்குதல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com