TTV Dhinakaran | அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், “விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை பார்வையிடச் சென்றவர்களில் 5 பேர் உயிரிழப்பு – குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் லட்சக்கணக்கான பொதுமக்களை இன்னல்களுக்குள்ளாக்கிய தமிழக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற பார்வையாளர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 200க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கின்றன.
விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் வருவார்கள் என முன்கூட்டியே தெரிந்திருந்தும் அவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளையோ, நிகழ்ச்சி நிறைவடைந்து திரும்பிச் செல்வதற்கான போதிய போக்குவரத்து வசதிகளையோ செய்து தராத தமிழக அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே 5 பேரின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்திற்கும் பவளவிழா மாநாட்டை நடத்துவதற்கும் அதீத கவனம் செலுத்தி முன்னேற்பாடுகளை முடுக்கிவிடும் திமுக அரசு, லட்சக்கணக்கானோர் கூடிய மெரினா கடற்கரையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யத் தவறியது மக்கள் மீதான அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது.
எனவே, நீர்ச்சத்து குறைபாடு, மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குவதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
- என் மகன் நிரபராதி.. யார் அந்த பெரிய இடம்? கோயில் காவலாளி அஜித் குமாரின் தாயார் கண்ணீர்!
Ajith Kumars Lock Up Death Case: “என் மகன் நிரபராதி; நீதிமன்றம் இதனை தெளிவுபடுத்தி உள்ளது. ஒன்றுமே இல்லாத புகாரில் எனது மகன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்”என கோயில் காவலாளி அஜித் குமாரின் தாயார் கூறினார்.
- கமல்ஹாசன் உரையை லட்சோப லட்ச மக்கள் புகழ்கிறார்கள்.. கவிஞர் சிநேகன்!
Kamal Haasan: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் முதல் பாராளுமன்ற உரையை லட்சோப லட்சம் மக்கள் புகழ்கிறார்கள் என தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவரும் கவிஞருமான சினேகன்.
- தமிழ்நாட்டில் வலிமையான காங்கிரஸ்.. 18 எம்எல்ஏ, 9 எம்பிக்கள்.. பட்டியலிட்ட செல்வப்பருந்தகை!
K Selvaperunthagai: தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ் வலிமையான கட்சியாக திகழ்கிறது என்று கூறிய செல்வப் பெருந்தகை காங்கிரஸ் வசம் 9 எம்பிக்கள் மற்றும் 18 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
- பயங்கரவாதி சுட்டுக்கொலை.. ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு!
Terrorist Killed in Encounter: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எனினும், பாதுகாப்பு படையினர் ஆபரேஷனை தொடர்ந்துவருகின்றனர். அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
- ஆசிய துப்பாக்கிச் சுடுதல்.. தங்கம் வென்ற ஈஷா சிங்
Asian Rifle and Pistol Championship: ஆசிய ரைஃபிள் மற்றும் பிஸ்டல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஈஷா சிங் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்