TTV Dhinakaran | அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், “விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை பார்வையிடச் சென்றவர்களில் 5 பேர் உயிரிழப்பு – குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் லட்சக்கணக்கான பொதுமக்களை இன்னல்களுக்குள்ளாக்கிய தமிழக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற பார்வையாளர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 200க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கின்றன.
விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் வருவார்கள் என முன்கூட்டியே தெரிந்திருந்தும் அவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளையோ, நிகழ்ச்சி நிறைவடைந்து திரும்பிச் செல்வதற்கான போதிய போக்குவரத்து வசதிகளையோ செய்து தராத தமிழக அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே 5 பேரின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்திற்கும் பவளவிழா மாநாட்டை நடத்துவதற்கும் அதீத கவனம் செலுத்தி முன்னேற்பாடுகளை முடுக்கிவிடும் திமுக அரசு, லட்சக்கணக்கானோர் கூடிய மெரினா கடற்கரையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யத் தவறியது மக்கள் மீதான அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது.
எனவே, நீர்ச்சத்து குறைபாடு, மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குவதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
- ‘திருமாவுக்கு 6 சீட் தான்.. இருந்தால் இரு, இல்லை போ’.. திமுக அட்ராசிட்டி என்கிறார் ஆதவ் அர்ஜுனா!
Assembly election 2026: ” திமுக கூட்டணியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பயணிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவனுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் ஆறு சீட்டுகள் நான் கொடுக்க முடியும் என திமுக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.
- ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் கிளிக்
- 5 தொகுதிக்கு சம்மதம்? மு.க ஸ்டாலினிடம் பேச தயாராகும் மார்க்சிஸ்ட்? லேட்டஸ்ட் தகவல்கள்!
Assembly election 2026: திமுக தலைவரும் முதலமைச்சர் ஆன மு.க ஸ்டாலினிடம் பேசி சுமூகமுறையில் தீர்வு காண முயற்சிப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் தனித்து நின்று பாஜகவால் ஒரு தொகுதியாவது வெற்றி பெற முடியுமா? ஓ.பி.எஸ் சவால்!
Assembly Election 2026: தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி எங்கு இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார் சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம்.
- சென்னையில் சரத்குமார் திடீர் ஆலோசனை.. பாஜகவில் இருந்து விலகல்?
Sarathkumar: சென்னையில் நடிகர் சரத்குமார் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்; அவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்