Courtallam Falls: வார இறுதி நாட்களை முன்னிட்டு குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் பெருமளவில் குவிந்துள்ளனர்.
Courtallam Falls: வார இறுதி நாட்களை முன்னிட்டு குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் பெருமளவில் குவிந்துள்ளனர்.

Published on: June 13, 2026 at 5:35 pm
தென்காசி, ஜுன் 13 2026: தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் வார இறுதி நாட்களை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் பெருமளவில் குவிந்துள்ளனர். பருவமழையின் தாக்கம் குறைந்து அருவியின் நீர்வரத்து சீராகியநிலையில், நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளியலில் ஈடுபட்டுள்ளனர்.
பருவமழை காரணமாக மூடப்பட்டிருந்த மெயின் அருவிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், அடுத்த சில நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றால அருவி, தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக இருப்பதால், சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகை தருவது இயல்பானதாகும். அருவியின் இயற்கை அழகை ரசிக்கவும், குளியலில் ஈடுபடவும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளியலில் ஈடுபட அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியிலும் போலீசார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விடுமுறை நாளையொட்டி மக்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், குற்றாலப் பகுதிகளில் விழாக்கோலம் நிலவி வருகிறது.
இதையும் படிங்க : மேட்டூர் அணை திறப்பில் தாமதம்.. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com