CBI investigation into Karur stampede: கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
CBI investigation into Karur stampede: கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Published on: October 13, 2025 at 12:44 pm
கரூர், அக்.13, 2025: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் பங்கேற்ற பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது நாற்பது பேர் உயிரிழந்தனர்.
அக்டோபர் 27ஆம் தேதி நடந்த இந்த கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை தமிழ்நாடு அரசு ஐகோர்ட் உத்தரவின் பேரில் அறிவித்தது.
இந்நிலையில், இதற்கு எதிராக கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வருகிறது.
இதையடுத்து, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தலைமையிலான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (அக்.13, 2025) உத்தரவிட்டது.
தொடர்ந்து, நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் என்.வி.அஞ்சாரியா தலைமையிலான அமர்வு, விசாரணையை கண்காணிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட்டது.
கரூர் கூட்ட நெரிசல் – வழக்குப்பதிவு
கரூர் நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில்., தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் (வடக்கு) மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீது பாரதீய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 105 (குற்றமற்ற கொலை), 110 (குற்றமற்ற கொலை முயற்சி) மற்றும் 125 (மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 20 குழந்தைகளின் உயிரை குடித்த இருமல் மருந்து… மு.க ஸ்டாலின் பதில் என்ன? சீமான் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com