Special Buses | தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
Special Buses | தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
Published on: November 2, 2024 at 11:50 am
Special Buses | தீபாவளி பண்டிகையை தனது சொந்த ஊர்களில் கொண்டாட 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சென்னையிலிருந்து சென்றுள்ளனர். இதனால் சென்னை ஆள்நடமாட்டமின்றி காணப்படுகிறது. இதனிடையே, சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்ப வசதியாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தீபாவளி முடிந்து, பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக 2-ந்தேதி (இன்று) முதல் 4-ந்தேதி வரையில் தினந்தோறும் இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் 3 ஆயிரத்து 165 சிறப்பு பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களிலிருந்து 3 ஆயிரத்து 405 பேருந்துகள் என மொத்தம் 12 ஆயிரத்து 846 பேருந்துகள் இயக்கப்படும். எனவே, பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்க்கவும். தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க கோவை- தன்பாத் ரயில் மாற்றம்: புதிய நேரத்தை செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com