திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்த மூன்று பயணிகளை அதிகாரிகள் கைது செய்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்த மூன்று பயணிகளை அதிகாரிகள் கைது செய்தனர்.
Published on: November 30, 2024 at 12:53 pm
Trichy airport Arrest | திருச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) விமான நிலைய அதிகாரிகள் சோதனையின்போது, ஏர் ஏசியா விமானம் மூலம் அதிகாலை கோலாலம்பூரில் இருந்து பயணித்த பயணிகளில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயணி பாலு (58) என்பவர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்தது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் பாலுவை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல், பரமக்குடியைச் சேர்ந்த குதுப்தீன் (47) என்பவர் பாஸ்போர்ட்டில் மனைவி பெயரையும், பிறந்த தேதியையும் மாற்றியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனே அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர்.
மேலும், தேவகோட்டையைச் சேர்ந்த நேரு (55) என்ற பயணி போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பாஸ்போர்ட் பெற்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். நேரு மஸ்கட்டில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் வந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் பாஸ்போர்ட்டின் விவரங்களையும் மாற்றியிருந்தார். மேலும் குடியேற்ற அதிகாரிகளின் புகாரின் அடிப்படையில் இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க அசாமில் நிலநடுக்கம் ; பொதுமக்கள் அச்சம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com