நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரை வெட்டி கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரை வெட்டி கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on: November 14, 2024 at 5:42 pm
Tirunelveli | நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்த தெற்கு வள்ளியூரை சார்ந்த முத்துராமன் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி முன்பகை காரணமாக அதே ஊரைச் சார்ந்த முத்துராமன், ராம்கி என்ற ராம்குமார் ,தில்லை ,குணா ,மற்றும் தங்கவேல் ஆகியோர் முத்துராமன் வந்த காரை வழிமறித்து வெட்டி கொலை செய்தனர் .
இது சம்பந்தமாக பணகுடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நெல்லை முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் நீதிபதி பத்மநாபன் முத்துராமன் ,ராம்கி ,தில்லை, குணா மற்றும் தங்கவேல் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் மு. கருணாநிதி ஆஜராகி இருந்தார்.
இதையும் படிங்க பெண் போக்குவரத்து காவலர் மீது போதை ஆசாமி தாக்குதல் ; காவலர்களுக்கே பாதுகாப்பில்லை ; டிடிவி தினகரன் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com