Chennai: சென்னையில் 4 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. அது எந்தெந்த இடங்கள் தெரியுமா?
Chennai: சென்னையில் 4 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. அது எந்தெந்த இடங்கள் தெரியுமா?
Published on: May 6, 2025 at 12:25 pm
சென்னை, மே 6 2025: இந்தியா முழுவதும் 54 ஆண்டுகளுக்கு பின்னர் பாதுகாப்பு ஒத்திகை மே7ஆம் தேதி நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக 1971ஆம் ஆண்டு கடைசியாக இந்தியா மாநிலங்கள் முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. அக்காலக்கட்டம் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட காலக்கட்டமாகும்.
இந்த நிலையில் நாளை (மே 7 2025) சென்னையில் 4 இடங்களில் போர் ஒத்திகை நடைபெறவுள்ளது. அந்த இடங்கள் கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி மற்றும் மணலி ஆகியவை ஆகும். இதற்கிடையில், இந்த இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
முன்னதாக, சிவில் பாதுகாப்பு தயார்நிலையை மேம்படுத்துவதற்காக மே 7 ஆம் தேதி போலிப் பயிற்சிகளை நடத்துமாறு உள்துறை அமைச்சகம் (MHA) திங்கள்கிழமை (மே 5 2025) பல மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.
அப்போது, வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்களை இயக்கவும், பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இதையும் படிங்க : 2026ல் டீ விக்கதான் போறீங்க.. த.வெ.க.வை தி.மு.க. மேடையில் கலாய்த்த லியோனி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com