Karthi P Chidambaram | சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தி ப சிதம்பரம் சென்னையில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மிக வலுவாக உள்ளது” என்றார். மேலும் பேசிய கார்த்தி, “ஹரியானாவில் காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னமும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. மகாராஷ்டிராவில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அங்கு தேர்தல் நடக்கும்போது அங்கும் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றார்.
மகாராஷ்டிராவில் நவ.26ஆம் தேதிக்கு முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனை தலைமை தேர்தல் ஆணையரே உறுதிப்படுத்தியுள்ளார். இங்கு உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவா காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது” குறிப்பிடத்தக்கது.
வம்ச அரசியல் சலிப்பான வாதம்
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்றது குறித்து பேசிய கார்த்தி ப சிதம்பரம், “முதல்வர் எடுத்த முடிவு அவரது உரிமைக்கு உட்பட்டது. யாரையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவும், கைவிடவும், பதவி உயர்வு அளிக்கவும் அவருக்கு உரிமை உண்டு. முதல்வர் தனது உரிமைக்கு உட்பட்டு சிறப்பாக செயல்பட்டுள்ளார். வம்ச அரசியல் என்பது ஓர் சலிப்பான வாதம்” என்றார்.
இதையும் படிங்க
Actor vishal | துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்….
Udhayanidhi Stalin | ‘என்னை சந்திக்க தொண்டர்கள் சென்னை வருவதை தவிர்க்க வேண்டும்’ என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்….
தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றப்பட்டது. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்….
தந்தை முதலமைச்சராகவும் (மு.க. ஸ்டாலின்), மகன் துணை முதலமைச்சராகவும் இருப்பது அரசியலில் தவறான முன்னுதாரணம்” என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்….
Udhayanidhi Stalin | துணை முதலமைச்சர் பதவி ஏற்க உள்ள உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்