சென்னை, செப்.15, 2025: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உதவித்தொகை கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பயனாளிக்கு பதிலாக உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகளாக கிடைத்துள்ளது. இது குறித்து, கோவை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அதாவது, பயனாளியின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண்ணில் ஏற்பட்ட தவறுதான் குழப்பத்திற்கு வழிவகுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதாவது, கொண்டம்பட்டியைச் சேர்ந்த பயனாளியான ஆர். மகேஸ்வரி (50) என்பவருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை கிடைக்கவிருந்த நிலையில், அது, உத்தரப் பிரதேச பெண்ணின் கணக்கில் இரண்டு ஆண்டுகளாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இது, “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களின் ஒரு பகுதியாக வெளிவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மகேஸ்வரி கூறுகையில், “நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு மகளிர் உரிமைத் தோகை உதவித் தொகைக்கு விண்ணப்பித்தேன். நிதி கிடைக்காதபோது, எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கருதினேன்” என்றார்.
மேலும், “உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எனது பெயரை மீண்டும் திட்டத்தில் சேர்க்குமாறு ஒரு மனுவை சமர்ப்பித்தேன். எனது மனுவை பரிசீலித்த பிறகு, நான் ஏற்கனவே திட்டத்தில் பயன்பெறுவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், எனது ஆதார் விவரங்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வேறு வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதை உணர்ந்தேன்.
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நபரின் கணக்கில் மாதா மாதம் ரூ.1,000 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, வங்கி அதிகாரிகள் எனது விசாரணைகளை முறையாகக் கவனிக்கவில்லை” என்றார்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : விஜய் வெல்வாரா என்பதை சொல்ல முடியாது.. கார்த்தி ப சிதம்பரம்!
Andhra Pradesh bus accident 2025: ஆந்திராவின் அல்லூரி சீதா ராமராஜூ மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் சிக்கி 9 பேர் மரணம் அடைந்தார்கள்….
President Droupadi Murmu Manipur visit 2025: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மணிப்பூர் மாநிலத்தில் நலத்திட்ட உதவிகள் தொடங்கிவைத்தார்….
Telangana Gram Panchayat elections 2025: தெலங்கானா மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தலில் முதல்கட்டமாக 84.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன….
Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான், ஓமன் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு 4 நாள்கள் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்….
Shivraj Singh Chouhan: கடந்த 10 ஆண்டுகளில் பயிர் உற்பத்தி 44 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கூறினார்….
Shivraj Patil: முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தனது 91வது வயதில் இன்று (டிச.12, 2025) மகாராஷ்டிராவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்….