சென்னை, செப்.15, 2025: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உதவித்தொகை கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பயனாளிக்கு பதிலாக உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகளாக கிடைத்துள்ளது. இது குறித்து, கோவை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அதாவது, பயனாளியின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண்ணில் ஏற்பட்ட தவறுதான் குழப்பத்திற்கு வழிவகுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதாவது, கொண்டம்பட்டியைச் சேர்ந்த பயனாளியான ஆர். மகேஸ்வரி (50) என்பவருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை கிடைக்கவிருந்த நிலையில், அது, உத்தரப் பிரதேச பெண்ணின் கணக்கில் இரண்டு ஆண்டுகளாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இது, “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களின் ஒரு பகுதியாக வெளிவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மகேஸ்வரி கூறுகையில், “நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு மகளிர் உரிமைத் தோகை உதவித் தொகைக்கு விண்ணப்பித்தேன். நிதி கிடைக்காதபோது, எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கருதினேன்” என்றார்.
மேலும், “உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எனது பெயரை மீண்டும் திட்டத்தில் சேர்க்குமாறு ஒரு மனுவை சமர்ப்பித்தேன். எனது மனுவை பரிசீலித்த பிறகு, நான் ஏற்கனவே திட்டத்தில் பயன்பெறுவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், எனது ஆதார் விவரங்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வேறு வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதை உணர்ந்தேன்.
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நபரின் கணக்கில் மாதா மாதம் ரூ.1,000 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, வங்கி அதிகாரிகள் எனது விசாரணைகளை முறையாகக் கவனிக்கவில்லை” என்றார்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : விஜய் வெல்வாரா என்பதை சொல்ல முடியாது.. கார்த்தி ப சிதம்பரம்!
Israeli airstrike on Iran: பழிவாங்குவதாக நினைத்து அமெரிக்கா மீது இஸ்ரேல் மீதோ பதில் தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரானுக்கு அமெரிக்க அதிபர்…
MK Stalin Birthday: தமிழும் தமிழ்நாடு நம் உயிர் என தெரிவித்துள்ள மு.க ஸ்டாலின் உழைப்பை தவிர வேறொன்றும் அறியேன் என தனது பிறந்த நாளில் ட்விட்டர்…
Tamil News Updates March 01 2026: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
Annamalai: நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய்- சங்கீதா பிரிவு குறித்து செய்தியாளர்கள் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கு அண்ணாமலை இடம்…
Israeli airstrike on Iran: ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 51 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்….
Holi 2026: தீபாவளிக்குப் பிறகு இரண்டாவது பெரிய இந்து பண்டிகையாக ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது….