Teachers protest: 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக அளித்த 311 வது வாக்குறுதியை நிறைவேற்ற கோரி சென்னையில் ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Teachers protest: 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக அளித்த 311 வது வாக்குறுதியை நிறைவேற்ற கோரி சென்னையில் ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Published on: January 11, 2026 at 10:31 pm
சென்னை ஜனவரி 11, 2026: சென்னையில் ஆசிரியர்களின் தொடர் போராட்டம் 17-வது நாளை எட்டி உள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த 311-வது, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். முன்னதாக இவர்கள் அரசின் கவனத்தை தங்கள் மீது திருப்பும் வகையில் பல்வேறு நூதனமாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். எனினும் அரசை இவர்களின் போராட்டத்தை இன்றளவும் வரை, கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 17 வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம் தொடர்வது அரசுக்கு பெரும் தலைவலி ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர்கள் தினந்தோறும் தேர்தலுக்கு முன்பு திமுக அடித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி, நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; ஆட்சியில் பங்கு இல்லை.. காங்கிரசுக்கு அமைச்சர் பெரியசாமி பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com