Edappadi Palaniswami Ramzan Greetings: முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுதுள்ள புனித ரமலான் வாழ்த்துச் செய்தியில், ” இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக அதிமுக என்றென்றும் துணை நிற்கும்” என தெரிவித்துள்ளார்.
Edappadi Palaniswami Ramzan Greetings: முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுதுள்ள புனித ரமலான் வாழ்த்துச் செய்தியில், ” இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக அதிமுக என்றென்றும் துணை நிற்கும்” என தெரிவித்துள்ளார்.
Published on: March 31, 2025 at 1:54 pm
சென்னை மார்ச் 31 2025: இஸ்லாமிய பெருமக்களுக்கு அதிமுக என்றென்றும் துணை நிற்கும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புனித ரமலான் வாழ்த்து செய்தியில் உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய பெருமக்கள் புனித ரமலான் பண்டிகையை இன்று (மார்ச் 31 2025) கொண்டாடுகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள புனித ரமலான் வாழ்த்து செய்தியில், ” இஸ்லாமிய பெருமக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Tamil News Live Updates Mar 31 2025: தியாகராஜர் கோவில் தேரோட்டம்.. திருவாரூரில் ஏப்ரல் 7 உள்ளூர் விடுமுறை!
தொடர்ந்து, அதிமுக ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய பெருமக்களின் நலன் கருதி பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, ” இஸ்லாமிய பெருமக்களின் பாதுகாவலராக அதிமுக என்றென்றும் இருக்கும் என்பதை இந்த இனிய நாளில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துச் செய்தியில், ” தூய்மையும் பக்தியும் உள்ளதாய் பாவங்கள் அற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம் என நபிகள் நாயகம் உலகிற்கு பறைசாற்றியுள்ளார்.
இதனை நினைவில் கொண்டு தங்கள் கடமைகளை செவ்வனே செய்து கொண்டு வாழ வேண்டும்; பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களின் வாழ்வு என்றென்றும் வளர்பிறையாக ஒளிர வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
இந்த இனிய திருநாளில் என் அன்பின் இனிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா தூய வழியில் இதயம் நிறைந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துக்கள் மீண்டும் ஒருமுறை உரித்தாக்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நீங்கள் எதிரில் இல்லை; முதலில் இதை புரிந்து கொள்ளுங்கள்.. விஜய்க்கு தமிழிசை அட்வைஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com