சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்வு; திரும்பப் பெற வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்

சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. மக்களை முட்டாள்களாக நினைக்க கூடாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Published on: September 27, 2024 at 10:25 pm

Dr Ramadoss | சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்படவுள்ளது.

மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, கடந்த 2022&ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்துவரி உயர்த்தப் பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை சொத்துவரி உயர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் சொத்து வரியுடன் தொழில் வரியும் அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் சொத்துவரியும் உயர்த்தப் பட்டால் அது வீட்டு உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும்.

மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாகக் கூறி வெற்றி பெற்ற திமுக அரசு மக்கள் மீது வரி உயர்வு, கட்டண உயர்வு என அடுத்தடுத்து சுமைகளை சுமத்திக் கொண்டிருக்கிறது. மக்களை முட்டாள்களாக நினைத்து இவ்வளவு சுமைகளை சுமத்துவதை அனுமதிக்க முடியாது. திமுகவுக்கு வாக்களித்ததைத் தவிர தமிழ்நாட்டு மக்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. அதற்காக இவ்வளவு அதிக தண்டனை தேவையில்லை.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்துவரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :

இந்தியா- பாகிஸ்தான் சிறைக் கைதிகள் பட்டியல் பரிமாற்றம்.. முழு விவரம்! India, Pakistan Prisoner Exchange

இந்தியா- பாகிஸ்தான் சிறைக் கைதிகள் பட்டியல் பரிமாற்றம்.. முழு விவரம்!

India, Pakistan Prisoner Exchange : இந்தியா- பாகிஸ்தான் சிறைக் கைதிகள் பரிமாற்றம் புதன்கிழமை நடைபெற்றது….

ராமர் கோவில் நன்கொடை விவகாரம்.. குற்றவாளிகள் தப்பிக்க முடியாது.. யோகி ஆதித்யநாத் Ayothya Ram Temple Scam

ராமர் கோவில் நன்கொடை விவகாரம்.. குற்றவாளிகள் தப்பிக்க முடியாது.. யோகி ஆதித்யநாத்

Ayothya Ram Temple Scam : ராமர் கோவில் நன்கொடை விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் உறுதியளித்துள்ளார்….

ஆட்சியை கைப்பற்ற தி.மு.க., மு.க ஸ்டாலின் முயற்சி.. அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் C.T.R. Nirmal Kumar

ஆட்சியை கைப்பற்ற தி.மு.க., மு.க ஸ்டாலின் முயற்சி.. அமைச்சர் சி.டி. நிர்மல் குமார்

C.T.R Nirmal Kumar : தி.மு.க. குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறது; குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க மு.க ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என அமைச்சர் சி.டி. நிர்மல்…

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு! TNEA 2026 Rank List Released

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

TNEA 2026 Rank List Released : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தர்மபுரி மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்; 200 மதிப்பெண்களில் 200 பெற்ற…

Tamil News Updates July 01 2026: அரசியலில் இருந்து ஒதுங்கி விடுங்கள்.. மு.க. ஸ்டாலினை வலியுறுத்திய நிர்மல் குமார்

Tamil News Updates July 01 2026: அரசியலில் இருந்து ஒதுங்கி விடுங்கள்.. மு.க. ஸ்டாலினை வலியுறுத்திய நிர்மல் குமார்

Tamil News Updates July 01 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….

அயர்லாந்துக்கு எதிராக தோல்வி ஏன்? தவறு நடந்தது இங்குதான்.. ஸ்ரீகாந்த் Srikkanth on India's Loss

அயர்லாந்துக்கு எதிராக தோல்வி ஏன்? தவறு நடந்தது இங்குதான்.. ஸ்ரீகாந்த்

Srikkanth on India’s Loss : அயர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம் எனத் தெரிவித்துள்ளார் ஸ்ரீகாந்த்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com