சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்வு; திரும்பப் பெற வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்

சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. மக்களை முட்டாள்களாக நினைக்க கூடாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Published on: September 27, 2024 at 10:25 pm

Dr Ramadoss | சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்படவுள்ளது.

மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, கடந்த 2022&ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்துவரி உயர்த்தப் பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை சொத்துவரி உயர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் சொத்து வரியுடன் தொழில் வரியும் அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் சொத்துவரியும் உயர்த்தப் பட்டால் அது வீட்டு உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும்.

மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாகக் கூறி வெற்றி பெற்ற திமுக அரசு மக்கள் மீது வரி உயர்வு, கட்டண உயர்வு என அடுத்தடுத்து சுமைகளை சுமத்திக் கொண்டிருக்கிறது. மக்களை முட்டாள்களாக நினைத்து இவ்வளவு சுமைகளை சுமத்துவதை அனுமதிக்க முடியாது. திமுகவுக்கு வாக்களித்ததைத் தவிர தமிழ்நாட்டு மக்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. அதற்காக இவ்வளவு அதிக தண்டனை தேவையில்லை.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்துவரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :

விவாகரத்து மனுவை திரும்ப பெற்ற சங்கீதா.. சுதந்திர தின விழாவில் சல்யூட் அடித்த திரிஷா! Trisha

விவாகரத்து மனுவை திரும்ப பெற்ற சங்கீதா.. சுதந்திர தின விழாவில் சல்யூட் அடித்த திரிஷா!

Trisha: சென்னை சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா சல்யூட் அடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன….

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 47 பேர் உயிரிழப்பு! Indonesia Earthquake

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 47 பேர் உயிரிழப்பு!

Indonesia Earthquake: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 47 பேர் உயிரிழந்தனர்; இந்நிலையில் பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” மீண்டும் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது….

எதிர்பார்த்ததைவிட குவிந்த அதிக நிதி.. வெளிநாட்டு நாணய வைப்புத் திட்டம் நிறுத்தம்? Reserve Bank of India:

எதிர்பார்த்ததைவிட குவிந்த அதிக நிதி.. வெளிநாட்டு நாணய வைப்புத் திட்டம் நிறுத்தம்?

Reserve Bank of India: இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வெளிநாட்டு நாணய வைப்புத் திட்டமான எப்.சி.என்.ஆர் FCNR(B) டெபாசிட் விண்டோவை முன்கூட்டியே மூடிவிட்டது என்ற தகவல்…

‘எவ்வளவு பிஸியாக இருந்தாலும் காலை காபி குடிப்போம்’.. சூர்யா- ஜோதிகா க்யூட் பேட்டி! Suriya & Jyothika

‘எவ்வளவு பிஸியாக இருந்தாலும் காலை காபி குடிப்போம்’.. சூர்யா- ஜோதிகா க்யூட் பேட்டி!

Suriya & Jyothika: நாங்கள் எவ்வளவு பிசியான ஷெடுயூலில் இருந்தாலும் காலை காபி குடிப்போம்; இது எங்களுக்கு வழக்கமானதாக மாறிவிட்டது என நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா…

ஒரு நாயகன் உதயம்.. இலங்கையை புரட்டி எடுத்த தேவதத் படிக்கல்.. சதம் அடித்து அசத்தல்! Devdutt Padikkal

ஒரு நாயகன் உதயம்.. இலங்கையை புரட்டி எடுத்த தேவதத் படிக்கல்.. சதம் அடித்து அசத்தல்!

Devdutt Padikkal: இந்தியாவின் இளம் வீரர் தேவதத் படிக்கல், இலங்கையின் காலி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்….

முதல் நாளில் ₹27 கோடி வசூல்.. சூர்யாவின் விசுவநாத் அண்ட் சன்ஸ் பாக்ஸ் ஆபிஸில் எப்படி? ‘Viswanath & Sons’

முதல் நாளில் ₹27 கோடி வசூல்.. சூர்யாவின் விசுவநாத் அண்ட் சன்ஸ் பாக்ஸ் ஆபிஸில் எப்படி?

‘Viswanath & Sons’: நடிகர் சூர்யாவின் புதிய வரவான விசுவநாத் அண்ட் சன்ஸ் முதல் நாளில் ₹27 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com