Dr Ramadoss | சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்படவுள்ளது.
மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, கடந்த 2022&ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்துவரி உயர்த்தப் பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை சொத்துவரி உயர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் சொத்து வரியுடன் தொழில் வரியும் அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் சொத்துவரியும் உயர்த்தப் பட்டால் அது வீட்டு உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும்.
மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாகக் கூறி வெற்றி பெற்ற திமுக அரசு மக்கள் மீது வரி உயர்வு, கட்டண உயர்வு என அடுத்தடுத்து சுமைகளை சுமத்திக் கொண்டிருக்கிறது. மக்களை முட்டாள்களாக நினைத்து இவ்வளவு சுமைகளை சுமத்துவதை அனுமதிக்க முடியாது. திமுகவுக்கு வாக்களித்ததைத் தவிர தமிழ்நாட்டு மக்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. அதற்காக இவ்வளவு அதிக தண்டனை தேவையில்லை.
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்துவரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :
Sasikanth: தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிட உள்ளதால் தமிழக வெற்றிக்கழக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது….
Aswathaman: முதலமைச்சர் விஜய் அஜித் குமார் சந்திப்பு பார்க்க நன்றாக இருந்தது; முதலமைச்சர் விஜய் தனது சொந்த பணத்தில் லண்டன் சென்றாரா என பாஜகவில் அஸ்வத்தாமன் கேள்வி…
Special Buses: விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தங்களது ஊருக்கு சென்ற தென் மாவட்ட மக்கள் திரும்பி சென்னை வரும் வகையில், அதற்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர்…
Kolathur: சென்னை கொளத்தூரில் 12000 வெண்சங்குகளால் உருவாக்கப்பட்ட விநாயகர் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது….
T.K.S. Elangovan: முதலமைச்சர் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் செல்லவில்லை; கார் பந்தயம் பார்ப்பதற்காக அவர் லண்டன் சென்றுள்ளார் என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன்…
L. Murugan: முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் முதலீடு நோக்கங்கள் இருப்பது போல் தெரியவில்லை; விளையாட்டை தொடங்கி வைக்கவே அவர் லண்டன் சென்றுள்ளார் போலவே தெரிகிறது என…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்