சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்வு; திரும்பப் பெற வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்

சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. மக்களை முட்டாள்களாக நினைக்க கூடாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Published on: September 27, 2024 at 10:25 pm

Dr Ramadoss | சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்படவுள்ளது.

மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, கடந்த 2022&ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்துவரி உயர்த்தப் பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை சொத்துவரி உயர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் சொத்து வரியுடன் தொழில் வரியும் அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் சொத்துவரியும் உயர்த்தப் பட்டால் அது வீட்டு உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும்.

மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாகக் கூறி வெற்றி பெற்ற திமுக அரசு மக்கள் மீது வரி உயர்வு, கட்டண உயர்வு என அடுத்தடுத்து சுமைகளை சுமத்திக் கொண்டிருக்கிறது. மக்களை முட்டாள்களாக நினைத்து இவ்வளவு சுமைகளை சுமத்துவதை அனுமதிக்க முடியாது. திமுகவுக்கு வாக்களித்ததைத் தவிர தமிழ்நாட்டு மக்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. அதற்காக இவ்வளவு அதிக தண்டனை தேவையில்லை.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்துவரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :

கர்ப்பிணி பெண்கள் கொலஸ்ட்ரால் குறைப்பு மருந்துகளை உட்கொள்ளலாமா? புதிய ஆய்வுகள் சொல்வது என்ன ? Pregnant women

கர்ப்பிணி பெண்கள் கொலஸ்ட்ரால் குறைப்பு மருந்துகளை உட்கொள்ளலாமா? புதிய ஆய்வுகள் சொல்வது என்ன ?

Pregnant women: கர்ப்பிணி பெண்கள் கொலஸ்ட்ரால் குறைப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளலாமா? இது தொடர்பாக தற்போதைய புதிய ஆய்வுகள் சொல்வது என்ன? விரிவாக பார்க்கலாம்….

பஜாஜ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் உயர வாய்ப்பு? ஜெஃபரீஸ் கணிப்பு! Bajaj

பஜாஜ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் உயர வாய்ப்பு? ஜெஃபரீஸ் கணிப்பு!

Bajaj: பஜாஜ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் உயர வாய்ப்பு இருப்பதாக ஜெஃபரீஸ் தரகு நிறுவனம் கணித்துள்ளது….

ரயில் டிக்கெட் முன்பதிவு.. Uber புதிய சேவை தொடக்கம்! Uber

ரயில் டிக்கெட் முன்பதிவு.. Uber புதிய சேவை தொடக்கம்!

Uber: உபர் தனது சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், பயணத் தளமான ixigo-வுடன் இணைந்து ரயில் டிக்கெட் முன்பதிவு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது….

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு.. எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கப்படும்.. முதலமைச்சர் விஜய் CM Vijay

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு.. எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கப்படும்.. முதலமைச்சர் விஜய்

CM Vijay: ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்த்தப்படும் என்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்….

அய்யா வைகுண்டர் அவதார திருநாள், மாசி 20 பொது விடுமுறை.. த.வெ.க எம்.எல்.ஏ கோரிக்கை Ayya Vaikundar Day

அய்யா வைகுண்டர் அவதார திருநாள், மாசி 20 பொது விடுமுறை.. த.வெ.க எம்.எல்.ஏ கோரிக்கை

Ayya Vaikundar Day: அய்யா வைகுண்டர் அவதார திருநாளான, மாசி 20 பொது விடுமுறை அளிக்க வேண்டும் என நாங்குநேரி த.வெ.க எம்.எல்.ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் கோரிக்கை…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com