Dr Ramadoss | சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்படவுள்ளது.
மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, கடந்த 2022&ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்துவரி உயர்த்தப் பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை சொத்துவரி உயர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் சொத்து வரியுடன் தொழில் வரியும் அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் சொத்துவரியும் உயர்த்தப் பட்டால் அது வீட்டு உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும்.
மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாகக் கூறி வெற்றி பெற்ற திமுக அரசு மக்கள் மீது வரி உயர்வு, கட்டண உயர்வு என அடுத்தடுத்து சுமைகளை சுமத்திக் கொண்டிருக்கிறது. மக்களை முட்டாள்களாக நினைத்து இவ்வளவு சுமைகளை சுமத்துவதை அனுமதிக்க முடியாது. திமுகவுக்கு வாக்களித்ததைத் தவிர தமிழ்நாட்டு மக்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. அதற்காக இவ்வளவு அதிக தண்டனை தேவையில்லை.
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்துவரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :
Suraj Venjaramoodu: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் மிரட்டலான தோற்றத்தில் சூரஜ் வெஞ்சாரமூடுவின் ‘திலீப்’ கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது….
Durai Vaiko vs KN Nehru : நான் அரசியலுக்கு வந்தது விபத்து என கே.என்.நேரு விமர்சனத்துக்கு துரை வைகோ பதிலளித்துள்ளார்….
Chess Olympiad: செஸ் ஒலிம்பியாடில் இந்திய அணிக்கு தடுமாற்றமான தொடக்கம் ஏற்பட்டுள்ளது. 2700 ரேட்டிங்கை குகேஷ் இழந்துள்ளார்….
Gold Rate today : இன்றைய வர்த்தகத்தில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்வு கண்டுள்ளது. வெள்ளி விலையும் அதிகரித்து காணப்படுகிறது….
Dengue Cases Rise : தமிழ்நாட்டில் ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு. ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,096 ஆக அதிகரித்துள்ளது….
Radhika Apte: “உள்ளாடையுடன் ஆக்ஷன் காட்சி எடுக்கக் கேட்டனர்” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே பகீர் அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்