சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்வு; திரும்பப் பெற வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்

சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. மக்களை முட்டாள்களாக நினைக்க கூடாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Published on: September 27, 2024 at 10:25 pm

Dr Ramadoss | சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்படவுள்ளது.

மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, கடந்த 2022&ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்துவரி உயர்த்தப் பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை சொத்துவரி உயர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் சொத்து வரியுடன் தொழில் வரியும் அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் சொத்துவரியும் உயர்த்தப் பட்டால் அது வீட்டு உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும்.

மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாகக் கூறி வெற்றி பெற்ற திமுக அரசு மக்கள் மீது வரி உயர்வு, கட்டண உயர்வு என அடுத்தடுத்து சுமைகளை சுமத்திக் கொண்டிருக்கிறது. மக்களை முட்டாள்களாக நினைத்து இவ்வளவு சுமைகளை சுமத்துவதை அனுமதிக்க முடியாது. திமுகவுக்கு வாக்களித்ததைத் தவிர தமிழ்நாட்டு மக்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. அதற்காக இவ்வளவு அதிக தண்டனை தேவையில்லை.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்துவரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :

26 முக்கிய வழக்குகளை தீர்க்க உதவிய மோப்பநாய் ‘மோக்கா’ வீரமரணம்… 24 குண்டுகள் முழங்க அரசு இறுதி மரியாதை Moka Tribute

26 முக்கிய வழக்குகளை தீர்க்க உதவிய மோப்பநாய் ‘மோக்கா’ வீரமரணம்… 24 குண்டுகள் முழங்க அரசு இறுதி மரியாதை

Moka Tribute: நீலகிரி மாவட்ட காவல்துறையின் மோப்பநாயான ‘மோக்கா’, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது….

கொலை வழக்கில் மகனை காப்பாற்ற முயன்ற தாய்க்கு சிறை… இங்கிலாந்து நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! UK Crime

கொலை வழக்கில் மகனை காப்பாற்ற முயன்ற தாய்க்கு சிறை… இங்கிலாந்து நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

UK Crime: இங்கிலாந்தில் இளைஞர் கொலை வழக்கில், தனது மகன் பயன்படுத்திய கொலை ஆயுதத்தை சம்பவ இடத்திலிருந்து அகற்றி விசாரணைக்கு இடையூறு செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த…

இருக்கைகள் காலி… கடைசி நேரத்தில் திருச்சி – பெங்களூரு சிறப்பு ரயில் ரத்து! Train Cancelled

இருக்கைகள் காலி… கடைசி நேரத்தில் திருச்சி – பெங்களூரு சிறப்பு ரயில் ரத்து!

Train Cancelled : பயணிகள் முன்பதிவு மிகவும் குறைவாக இருந்ததால், திருச்சி – பெங்களூரு இடையே இயக்கப்பட இருந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே…

சங்கர நாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! Aadi Thabasu

சங்கர நாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Aadi Thabasu: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோவிலின் புகழ்பெற்ற ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது….

நைஜீரியாவில் சந்தித்த கசப்பான அனுபவம்… குழந்தைப் பருவ வேதனையை பகிர்ந்த பாக்யஸ்ரீ போர்ஸ்! Bhagyashri

நைஜீரியாவில் சந்தித்த கசப்பான அனுபவம்… குழந்தைப் பருவ வேதனையை பகிர்ந்த பாக்யஸ்ரீ போர்ஸ்!

Bhagyashri: ஆங்கிலம் தெரியாத காரணத்தால் நைஜீரியாவில் சிறுவயதில் கேலி மற்றும் அவமானத்திற்கு ஆளானதாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தெரிவித்துள்ளார்….

ஜப்பான் ஓபன் 2026: ஒகுஹாரா விலகல்… அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! Japan Open

ஜப்பான் ஓபன் 2026: ஒகுஹாரா விலகல்… அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து!

Japan Open: ஜப்பான் ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாரா விலகியதால் இந்தியாவின் பி.வி. சிந்து வாக்ஓவர் மூலம்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com