Dr Ramadoss | சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்படவுள்ளது.
மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, கடந்த 2022&ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்துவரி உயர்த்தப் பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை சொத்துவரி உயர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் சொத்து வரியுடன் தொழில் வரியும் அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் சொத்துவரியும் உயர்த்தப் பட்டால் அது வீட்டு உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும்.
மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாகக் கூறி வெற்றி பெற்ற திமுக அரசு மக்கள் மீது வரி உயர்வு, கட்டண உயர்வு என அடுத்தடுத்து சுமைகளை சுமத்திக் கொண்டிருக்கிறது. மக்களை முட்டாள்களாக நினைத்து இவ்வளவு சுமைகளை சுமத்துவதை அனுமதிக்க முடியாது. திமுகவுக்கு வாக்களித்ததைத் தவிர தமிழ்நாட்டு மக்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. அதற்காக இவ்வளவு அதிக தண்டனை தேவையில்லை.
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்துவரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :
Karur Stampede: கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விஜய் மார்ச் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை டெல்லி சிபிஐ அலுவலகத்தில்…
Assembly Election 2026: “10 எம்எல்ஏக்களாவது இருந்தால் தான் சட்டமன்றத்தில் கூடுதலாக பேச முடியும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்….
Assembly Election 2026: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் மற்றும் திமுக இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது….
Chinmayi: ஞானபீட விருது பெற்ற பின் வைரமுத்துவை பாராட்டிய கமல்ஹாசனை, #MeToo குற்றச்சாட்டில் சிக்கியவரை ஆதரித்ததாக சின்மயி ஸ்ரிபாதா கடுமையாக விமர்சித்தார்….
Vijay Sethupathi: நான் தயாரித்த பெரும்பாலான திரைப்படங்கள் நஷ்டம் தான் என கூறியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி…
Priyanka Chopra: ஆஸ்கார் விருதுகளுக்கு முன் நடைபெற்ற நட்சத்திரங்கள் நிரம்பிய விருந்தில், பிரியங்கா சோப்ரா அழகான வெள்ளை டியோர் உடையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதனை புல்காரி…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்