சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்வு; திரும்பப் பெற வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்

சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. மக்களை முட்டாள்களாக நினைக்க கூடாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Published on: September 27, 2024 at 10:25 pm

Dr Ramadoss | சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்படவுள்ளது.

மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, கடந்த 2022&ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்துவரி உயர்த்தப் பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை சொத்துவரி உயர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் சொத்து வரியுடன் தொழில் வரியும் அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் சொத்துவரியும் உயர்த்தப் பட்டால் அது வீட்டு உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும்.

மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாகக் கூறி வெற்றி பெற்ற திமுக அரசு மக்கள் மீது வரி உயர்வு, கட்டண உயர்வு என அடுத்தடுத்து சுமைகளை சுமத்திக் கொண்டிருக்கிறது. மக்களை முட்டாள்களாக நினைத்து இவ்வளவு சுமைகளை சுமத்துவதை அனுமதிக்க முடியாது. திமுகவுக்கு வாக்களித்ததைத் தவிர தமிழ்நாட்டு மக்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. அதற்காக இவ்வளவு அதிக தண்டனை தேவையில்லை.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்துவரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :

கவனம் ஈர்க்கும் திருநங்கை வேட்பாளர்.. யார் இந்த நாம் தமிழர் ரோஷினி? NTK’s Roshini in Villivakkam

கவனம் ஈர்க்கும் திருநங்கை வேட்பாளர்.. யார் இந்த நாம் தமிழர் ரோஷினி?

NTK’s Roshini in Villivakkam : வில்லிவாக்கத்தை மாதிரி தொகுதியாக மாற்ற விரும்பும் ஒரே திருநங்கை வேட்பாளர் ரோஷினி ஆவார்….

மதுரை திருப்பரன்குன்றத்தில் தொல்லியல் ஆய்வு.. நீதிமன்றம் உத்தரவு! Madras HC Directs ASI-Revenue Hill Survey

மதுரை திருப்பரன்குன்றத்தில் தொல்லியல் ஆய்வு.. நீதிமன்றம் உத்தரவு!

Madras HC Directs ASI-Revenue Hill Survey: மதுரை திருப்பரன்குன்றம் மலை விவகாரத்தில் தொல்லியல் ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆய்வு மே மாதத்துக்குள் நடத்த வேண்டும்…

கோவை வந்த போதிலும் பரப்புரை மேற்கொள்ளாத ராகுல்.. சிக்கலை எதிர்கொள்ளும் காங்கிரஸ்! Congress Faces Low-Profile Battle in Coimbatore

கோவை வந்த போதிலும் பரப்புரை மேற்கொள்ளாத ராகுல்.. சிக்கலை எதிர்கொள்ளும் காங்கிரஸ்!

Congress Faces Low-Profile Battle in Coimbatore: கோவையில் காங்கிரஸ் புதிய சிக்கலை சந்தித்து வருகிறது. கோயம்புத்தூர் பகுதிக்கு வந்த போதிலும் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்ளவில்லை….

பான் மசாலா விளம்பரத்தில் சல்மான் கான்.. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு! Salman Khan Gets Interim Relief

பான் மசாலா விளம்பரத்தில் சல்மான் கான்.. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

Salman Khan Gets Interim Relief : பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததாக ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக நடிகர் சல்மான் கானுக்கு நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளது….

அப்பாவு vs பாலகிருஷ்ணன்.. ராதாபுரத்தில் கடும் போட்டி! Assembly Election 2026

அப்பாவு vs பாலகிருஷ்ணன்.. ராதாபுரத்தில் கடும் போட்டி!

Assembly Election 2026 : திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் அப்பாவு, பா.ஜ.கவின் எஸ்.பி பாலகிருஷ்ணன் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது….

விழிப்புடன் இருந்து வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்..விஜய் Assembly Election 2026

விழிப்புடன் இருந்து வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்..விஜய்

Assembly Election 2026: புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com