சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்வு; திரும்பப் பெற வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்

சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. மக்களை முட்டாள்களாக நினைக்க கூடாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Published on: September 27, 2024 at 10:25 pm

Dr Ramadoss | சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்படவுள்ளது.

மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, கடந்த 2022&ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்துவரி உயர்த்தப் பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை சொத்துவரி உயர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் சொத்து வரியுடன் தொழில் வரியும் அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் சொத்துவரியும் உயர்த்தப் பட்டால் அது வீட்டு உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும்.

மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாகக் கூறி வெற்றி பெற்ற திமுக அரசு மக்கள் மீது வரி உயர்வு, கட்டண உயர்வு என அடுத்தடுத்து சுமைகளை சுமத்திக் கொண்டிருக்கிறது. மக்களை முட்டாள்களாக நினைத்து இவ்வளவு சுமைகளை சுமத்துவதை அனுமதிக்க முடியாது. திமுகவுக்கு வாக்களித்ததைத் தவிர தமிழ்நாட்டு மக்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. அதற்காக இவ்வளவு அதிக தண்டனை தேவையில்லை.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்துவரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :

ட்ரம்ப் முடிவால் தலைகீழ் மாற்றம்.. கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு! Brent Crude Prices Jump

ட்ரம்ப் முடிவால் தலைகீழ் மாற்றம்.. கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு!

Brent Crude Prices Jump : கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு Brent அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. ஈரானின் அமைதி பேச்சை ட்ரம்ப் நிராகரித்துள்ள நிலையில் இந்த…

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்புங்கள்.. பாரத மாதாவுக்கு நீங்கள் தேவை.. ஸோகோ ஸ்ரீதர் வேம்பு! Zoho

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்புங்கள்.. பாரத மாதாவுக்கு நீங்கள் தேவை.. ஸோகோ ஸ்ரீதர் வேம்பு!

Zoho : அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள ஸோகோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, பாரத மாதாவுக்கு நீங்கள்…

ஆப்கன் மீது பாக் தாக்குதல்.. 7 பேர் பலி.. பல்கலை கட்டடம் சேதம்! Pakistani Strikes Kill 7

ஆப்கன் மீது பாக் தாக்குதல்.. 7 பேர் பலி.. பல்கலை கட்டடம் சேதம்!

Pakistani Strikes Kill 7: ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் பாகிஸ்தான் இராணுவத் தாக்குதல்களில் மூவர் உயிரிழப்பு; 75 பேர் காயம் அடைந்தனர்….

மேரேஜ் பண்ணிக்கலாமா? ரூ.9 கோடி மோசடி.. பிரபல நடிகை மீது வழக்கு! Ashu Reddy

மேரேஜ் பண்ணிக்கலாமா? ரூ.9 கோடி மோசடி.. பிரபல நடிகை மீது வழக்கு!

Ashu Reddy: திருமண ஆசைக்காட்டி ரூ.9 கோடி மோசடியில் ஈடுபட்டதாக தெலுங்கு நடிகை மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது….

ஈரானுக்கு கை கொடுக்கும் ரஷ்யா.. அமைதியை மீட்டெடுக்க உறுதி.. விளாடிமிர் புதின்! Vladimir Putin

ஈரானுக்கு கை கொடுக்கும் ரஷ்யா.. அமைதியை மீட்டெடுக்க உறுதி.. விளாடிமிர் புதின்!

Vladimir Putin: ஈரானுக்கு ஆதரவளிக்கவும் மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்கவும் ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com