Dr Ramadoss | சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்படவுள்ளது.
மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, கடந்த 2022&ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்துவரி உயர்த்தப் பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை சொத்துவரி உயர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் சொத்து வரியுடன் தொழில் வரியும் அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் சொத்துவரியும் உயர்த்தப் பட்டால் அது வீட்டு உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும்.
மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாகக் கூறி வெற்றி பெற்ற திமுக அரசு மக்கள் மீது வரி உயர்வு, கட்டண உயர்வு என அடுத்தடுத்து சுமைகளை சுமத்திக் கொண்டிருக்கிறது. மக்களை முட்டாள்களாக நினைத்து இவ்வளவு சுமைகளை சுமத்துவதை அனுமதிக்க முடியாது. திமுகவுக்கு வாக்களித்ததைத் தவிர தமிழ்நாட்டு மக்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. அதற்காக இவ்வளவு அதிக தண்டனை தேவையில்லை.
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்துவரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :
Mandaadi Promo Out : சூரி நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் புரோமோ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது….
Afrotoons Launched: ஆப்பிரிக்கக் கதைகளை உலக குழந்தைகளிடம் கொண்டு செல்லும் நோக்கில் ‘Afrotoons’ என்ற புதிய அனிமேஷன் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது….
EPF Corpus Calculator: மாதம் ₹25,000 அடிப்படை சம்பளம் பெறும் ஒருவர், 30 ஆண்டுகள் EPF-ல் தொடர்ந்து பங்களித்தால், 8.25% வட்டி மற்றும் 5% ஆண்டு சம்பள…
Cargo Ship Sinks: தென் சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த சரக்கு கப்பல் மூழ்கியதில் 23 பேர் மாயமாகியுள்ளனர். 39 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், சீனா மற்றும்…
TN Names Zonal Council Members : தெற்கு மண்டல கவுன்சிலில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்த அமைச்சர்கள் ஆர். நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது….
Houthis Target Saudi: சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் கட்டமைப்புகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்