சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்வு; திரும்பப் பெற வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்

சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. மக்களை முட்டாள்களாக நினைக்க கூடாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Published on: September 27, 2024 at 10:25 pm

Dr Ramadoss | சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்படவுள்ளது.

மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, கடந்த 2022&ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்துவரி உயர்த்தப் பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை சொத்துவரி உயர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் சொத்து வரியுடன் தொழில் வரியும் அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் சொத்துவரியும் உயர்த்தப் பட்டால் அது வீட்டு உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும்.

மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாகக் கூறி வெற்றி பெற்ற திமுக அரசு மக்கள் மீது வரி உயர்வு, கட்டண உயர்வு என அடுத்தடுத்து சுமைகளை சுமத்திக் கொண்டிருக்கிறது. மக்களை முட்டாள்களாக நினைத்து இவ்வளவு சுமைகளை சுமத்துவதை அனுமதிக்க முடியாது. திமுகவுக்கு வாக்களித்ததைத் தவிர தமிழ்நாட்டு மக்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. அதற்காக இவ்வளவு அதிக தண்டனை தேவையில்லை.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்துவரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :

இடிந்தகரையைச் சேர்ந்த 43 மீனவர்களை மீட்டு தருக.. திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ் கோரிக்கை! Robert Bruce MP

இடிந்தகரையைச் சேர்ந்த 43 மீனவர்களை மீட்டு தருக.. திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ் கோரிக்கை!

MP Robert Bruce: இடிந்த கரையைச் சேர்ந்த 43 மீனவர்களை மீட்க வேண்டும் என திருநெல்வேலி எம்பி ராபர்ட் ப்ரூஸ் கோரிக்கை விடுத்துள்ளார்….

கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுக்கு விருது.. சிறந்த உள்நாட்டு கிரிக்கெட் சங்கம் எது தெரியுமா? Shubman Gill

கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுக்கு விருது.. சிறந்த உள்நாட்டு கிரிக்கெட் சங்கம் எது தெரியுமா?

Shubman Gill: இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக, சுப்மன் கில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்….

நாடாளுமன்றத்தில் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ விவகாரத்தை எழுப்பிய ராகுல் காந்தி.. பாத்திரம், கரண்டியுடன் திரிணாமூல் காங்கிரஸ்! Rahul Gandhi

நாடாளுமன்றத்தில் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ விவகாரத்தை எழுப்பிய ராகுல் காந்தி.. பாத்திரம், கரண்டியுடன் திரிணாமூல் காங்கிரஸ்!

Rahul Gandhi: நாடாளுமன்றத்தில் எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம் குறித்து ராகுல் காந்தி எழுப்பியதால் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது….

ராகுல் டிராவிட்டுக்கு புதிய அங்கீகாரம்.. வாழ்நாள் சாதனையாளர் விருது! Rahul Dravid

ராகுல் டிராவிட்டுக்கு புதிய அங்கீகாரம்.. வாழ்நாள் சாதனையாளர் விருது!

Rahul Dravid: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு, பிசிசிஐ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்க உள்ளது….

ஈரானில் சிக்கிய இந்திய மீனவர்கள்: வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்த விஜய் வசந்த் Kanyakumari MP Vijay Vasanth

ஈரானில் சிக்கிய இந்திய மீனவர்கள்: வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்த விஜய் வசந்த்

Kanyakumari MP Vijay Vasanth : ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்களை மீட்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், இந்திய வெளியுறவுத்துறை…

கேரளா லாட்டரி.. முதல் பரிசு ₹1 கோடி.. யார் அந்த அதிர்ஷ்டசாலி? Kerala Lottery Result Today

கேரளா லாட்டரி.. முதல் பரிசு ₹1 கோடி.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?

Kerala lottery results; கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் கே.என் 614, முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின்றன….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com