Dr Ramadoss | சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்படவுள்ளது.
மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, கடந்த 2022&ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்துவரி உயர்த்தப் பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை சொத்துவரி உயர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் சொத்து வரியுடன் தொழில் வரியும் அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் சொத்துவரியும் உயர்த்தப் பட்டால் அது வீட்டு உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும்.
மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாகக் கூறி வெற்றி பெற்ற திமுக அரசு மக்கள் மீது வரி உயர்வு, கட்டண உயர்வு என அடுத்தடுத்து சுமைகளை சுமத்திக் கொண்டிருக்கிறது. மக்களை முட்டாள்களாக நினைத்து இவ்வளவு சுமைகளை சுமத்துவதை அனுமதிக்க முடியாது. திமுகவுக்கு வாக்களித்ததைத் தவிர தமிழ்நாட்டு மக்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. அதற்காக இவ்வளவு அதிக தண்டனை தேவையில்லை.
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்துவரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :
Iyarkai : ‘நான்சி, கேப்டனே வந்து உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நான் விரும்பினது விரும்புனத தான்; இந்த மோதிரம் இதனால் வரைக்கும் அவன் ஞாபகம், என் உயிரைக்…
Crocodile Rescue: குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, வீட்டின் குளியலறைக்குள் புகுந்த 7 அடி நீள முதலை வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு…
Mekedatu Row: மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழக அரசு சட்டப் போராட்டத்தை தீவிரமாக தொடரும் என்றும், தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க உச்சநீதிமன்றமே ஒரே வழி என்றும்…
TN Weather: ஆகஸ்ட் மாதத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை…
CWG Judo: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் 57 கிலோ ஜூடோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாமினி மவுர்யாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
Japan Quake: வடக்கு ஜப்பானின் ஆமோரி மாகாணம் அருகே 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்