சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்வு; திரும்பப் பெற வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்

சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. மக்களை முட்டாள்களாக நினைக்க கூடாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Published on: September 27, 2024 at 10:25 pm

Dr Ramadoss | சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்படவுள்ளது.

மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, கடந்த 2022&ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்துவரி உயர்த்தப் பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை சொத்துவரி உயர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் சொத்து வரியுடன் தொழில் வரியும் அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் சொத்துவரியும் உயர்த்தப் பட்டால் அது வீட்டு உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும்.

மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாகக் கூறி வெற்றி பெற்ற திமுக அரசு மக்கள் மீது வரி உயர்வு, கட்டண உயர்வு என அடுத்தடுத்து சுமைகளை சுமத்திக் கொண்டிருக்கிறது. மக்களை முட்டாள்களாக நினைத்து இவ்வளவு சுமைகளை சுமத்துவதை அனுமதிக்க முடியாது. திமுகவுக்கு வாக்களித்ததைத் தவிர தமிழ்நாட்டு மக்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. அதற்காக இவ்வளவு அதிக தண்டனை தேவையில்லை.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்துவரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :

ஆன்லைன் மூலம் நீட் தேர்வு.. OMR பேப்பர் இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி! NEET Exam

ஆன்லைன் மூலம் நீட் தேர்வு.. OMR பேப்பர் இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி!

NEET Exam : நீட் தேர்வு இனிவரும் காலங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது….

தங்க மனசுக்காரர் விஜய்.. ஆட்சிக்கு வந்த ஐந்தே நாளில் ₹1,000 மகளிர் உதவித்தொகை விடுவிப்பு! Magalir Urimai Thogai Scheme

தங்க மனசுக்காரர் விஜய்.. ஆட்சிக்கு வந்த ஐந்தே நாளில் ₹1,000 மகளிர் உதவித்தொகை விடுவிப்பு!

Magalir Urimai Thogai Scheme: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், மே மாதத்திற்கான ரூ.1,000 உதவித்தொகை இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது….

Tamil News Updates May 15 2026: மேட்டூர் அணை திறப்பு – முதலமைச்சர் ஆலோசனை CM Vijay

Tamil News Updates May 15 2026: மேட்டூர் அணை திறப்பு – முதலமைச்சர் ஆலோசனை

Tamil News Updates May 15 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….

இன்ஸ்டா மூலம் பள்ளி மாணவி மிரட்டல்.. 3 மாணவர்கள் கைது Krishnagiri

இன்ஸ்டா மூலம் பள்ளி மாணவி மிரட்டல்.. 3 மாணவர்கள் கைது

Krishnagiri : கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இன்ஸ்டாகிராம் மூலம் பள்ளி மாணவியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

டெல்லி அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இரண்டு நாள் வொர்க் ஃபிரம் ஹோம்.. முதல்வர் அதிரடி! WFH in Delhi

டெல்லி அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இரண்டு நாள் வொர்க் ஃபிரம் ஹோம்.. முதல்வர் அதிரடி!

WFH in Delhi: டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாள்கள் வீட்டில் இருந்தே வேலை என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com