சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்வு; திரும்பப் பெற வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்

சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. மக்களை முட்டாள்களாக நினைக்க கூடாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Published on: September 27, 2024 at 10:25 pm

Dr Ramadoss | சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்படவுள்ளது.

மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, கடந்த 2022&ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்துவரி உயர்த்தப் பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை சொத்துவரி உயர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் சொத்து வரியுடன் தொழில் வரியும் அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் சொத்துவரியும் உயர்த்தப் பட்டால் அது வீட்டு உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும்.

மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாகக் கூறி வெற்றி பெற்ற திமுக அரசு மக்கள் மீது வரி உயர்வு, கட்டண உயர்வு என அடுத்தடுத்து சுமைகளை சுமத்திக் கொண்டிருக்கிறது. மக்களை முட்டாள்களாக நினைத்து இவ்வளவு சுமைகளை சுமத்துவதை அனுமதிக்க முடியாது. திமுகவுக்கு வாக்களித்ததைத் தவிர தமிழ்நாட்டு மக்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. அதற்காக இவ்வளவு அதிக தண்டனை தேவையில்லை.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்துவரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :

ஐ.பி.எல் மீது புலம்பல், முணுமுணுப்பு ஏன்? சுனில் கவாஸ்கர் Gavaskar defends IPL

ஐ.பி.எல் மீது புலம்பல், முணுமுணுப்பு ஏன்? சுனில் கவாஸ்கர்

Gavaskar defends IPL : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் மீது முணுமுணுப்பு மற்றும் புலம்பல் என் என கேள்வியெழுப்பியுள்ளார் சுனில் கவாஸ்கர்….

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தூய்மையாகிறது.. மஹுவா மொய்த்ரா Moitra calls exits party cleansing

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தூய்மையாகிறது.. மஹுவா மொய்த்ரா

Moitra calls exits party cleansing : திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தூய்மைப்படுத்தப்படுகிறது என அக்கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்….

முக்தார் எந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டார்? வழக்குரைஞர் கேள்வி YouTuber faces dual charges

முக்தார் எந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டார்? வழக்குரைஞர் கேள்வி

YouTuber faces dual charges : யூ-ட்யூபர் முக்தார் அஹமது எந்தெந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டார் என அவரது வழக்குரைஞர் கேள்வியெழுப்பியுள்ளார்….

இண்டி கூட்டணி கூட்டம்.. விஜய்யின் த.வெ.க பங்கேற்காதது ஏன்? TVK

இண்டி கூட்டணி கூட்டம்.. விஜய்யின் த.வெ.க பங்கேற்காதது ஏன்?

TVK : இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்காதது ஏன்?…

திருமணக் கனவு நனவாகும் முன்பே பரிதாபம்.. கூடன்குளத்தில், 23 வயது வழக்கறிஞர் உயிரிழப்பு! Kudankulam lawyer tragedy

திருமணக் கனவு நனவாகும் முன்பே பரிதாபம்.. கூடன்குளத்தில், 23 வயது வழக்கறிஞர் உயிரிழப்பு!

Kudankulam lawyer tragedy : திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளத்தில், வீட்டை சுத்தம் செய்தபோது காம்பவுண்ட் சுவரில் இருந்து விழுந்து வழக்கறிஞர் தீபிகா உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

தமிழக போலீசுக்கு தண்ணி காட்டிய முக்தார்.. பெங்களூருவில் சிக்கியது எப்படி? YouTuber Mukhtar Ahmed

தமிழக போலீசுக்கு தண்ணி காட்டிய முக்தார்.. பெங்களூருவில் சிக்கியது எப்படி?

YouTuber Mukhtar Ahmed : தமிழக போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாக இருந்த பிரபல யூ-ட்யூபர் முக்தார் அஹமது கைது செய்யப்பட்டுள்ளார்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com