பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம் : பெண்ணுக்கு ஜாமீன் மறுப்பு

Ponmudy mud slinging case | திமுக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாஜக பெண் தொண்டர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம்தள்ளுபடி செய்தது.

Published on: January 3, 2025 at 5:18 pm

Updated on: January 4, 2025 at 5:51 pm

பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம் | விழுப்புரம் மாவட்டம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய திமுக அமைச்சர் பொன்முடி சென்றிருந்தார். அப்போது அவர்மீது அப்பகுதியினர் அவர் மீது சேற்றை வாரி இறைத்தனர்.

பெங்கல் புயலின்போது போது பெய்த கனமழையைத் தொடர்ந்து, விழுப்புரத்தின் பல பகுதிகளில் மக்கள் வீடுகள் சேதமடைந்து இரண்டு நாட்களாக வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், அரசு உதவி செய்யக் கோரியும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வனத்துறை அமைச்சர் பொன்முடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியினர் சிலர் அமைச்சர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது சேறு வீசு வீசப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இந்த விவகாரத்தில் விஜயராணி என்ற பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர், தான் வெறும் பார்வையாளர் என்றும், இந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தநிலையில், ​​​​அந்தப் பெண் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை என்றும், முற்றிலும் அரசியல் காரணங்களுக்காக அமைச்சர் மீது சேற்றை வீசியதாகவும் அரசு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார், அதைத் தொடர்ந்து அவரது ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையும் படிங்க

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com