Anbumani on Mekedatu Row : முதலமைச்சர் விஜயின் திருச்சி பொதுக்கூட்டம் ஏமாற்றம் அளிக்கிறது என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani on Mekedatu Row : முதலமைச்சர் விஜயின் திருச்சி பொதுக்கூட்டம் ஏமாற்றம் அளிக்கிறது என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: June 2, 2026 at 7:47 pm
சென்னை, ஜூன் 2, 2026: தமிழக முதலமைச்சர் விஜயின் திருச்சிப் பொதுக்கூட்டம் ஏமாற்றம் அளிக்கிறது என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில், முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் அவர்கள் பங்கேற்ற முதல் அரசியல் நிகழ்ச்சியான திருச்சி பொதுக்கூட்டம், தமிழக மக்களுக்கும் குறிப்பாக விவசாயிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாமல், அது தேர்தலுக்குப் பிந்தைய பரப்புரைக் கூட்டமாகவே அமைந்தது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மே 10 அன்று பதவியேற்ற பிறகு, விஜய் அவர்கள் தனது அரசின் பயணத்தைப் பற்றி உரையாற்றியிருந்தார். ஆனால் அதன்பின் மூன்று வாரங்கள் கடந்தும் எந்த அரசு விழாவிலும் பங்கேற்று உரையாற்றவில்லை; புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், விவசாயிகள் எதிர்பார்த்த குறுவை பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு, மின்சாரம், தொகுப்பு திட்டம் போன்ற அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. மேட்டூர் அணை திறப்பு குறித்தும் அவர் வாய் திறக்காதது விவசாயிகளை ஏமாற்றியது.
மேகதாது அணைத் திட்டம் காவிரி பாசன மாவட்டங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், கர்நாடகத்தில் அது தீவிரப்படுத்தப்படும் என்ற சூழலில், தமிழக விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.
நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.4500 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையும் உரையில் இடம்பெறவில்லை. அதேபோல், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், அந்தப் பகுதி உழவர்களும் ஏமாற்றமடைந்தனர்.
பயிர்க்கடன் தள்ளுபடி குறித்தும் மக்கள் ஏமாற்றமடைந்தனர். சிறு, குறு உழவர்களின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைந்த அளவிலேயே தள்ளுபடி செய்யப்பட்டு, அதுகுறித்த திருத்தமும் அறிவிக்கப்படவில்லை.
உரம் விலை உயர்வு, மணல் கொள்ளை, கொள்முதல் நிலையக் குளறுபடிகள் போன்ற விவசாய பிரச்சினைகள் குறித்து பேசாமல், எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் தேர்தல் பரப்புரை உரையாகவே திருச்சி மேடை அமைந்தது. மக்கள் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் இனியாவது தேவைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ராஜ்யசபா இடைத்தேர்தல்.. சி.வி சண்முகம் இடத்தில் யார்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com