Coimbatore Pappammal death | கோவை பாப்பம்மாள் மரணத்துக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய முன்னோடி பாப்பம்மாள் பாட்டி முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
110 வயதான பாப்பம்மாள் பாட்டி கடைசி வரை இயற்கை விவசாயத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இளம் தலைமுறையினருக்கு இயற்கை விவசாயம் குறித்து பாடங்களை நடத்தியுள்ளார்.
இவரது சேவைகளை மதித்து 2021-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே காலில் விழுந்து வணங்கியது அவருக்கு வழங்கப்பட்ட சிறந்த அங்கீகாரமாகும்.
பாப்பம்மாள் பாட்டியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க
Anbumani Ramadoss: தமிழகத்தில் அரசுத்துறை காலிப்பணியிடங்கள் 5 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், அவற்றை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுத்து இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என…
Anbumani Ramadoss : “தமிழ்நாட்டிலும் சமூகநீதி கணக்கெடுப்புக்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்” என பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்….
Anbumani Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சி கிளை, ஒன்றிய, மாவட்ட அளவில் மறுசீரமைப்புக்கு தயாராகிறது….
Anbumani Ramadoss: “பல்கலை. வேந்தர் முதலமைச்சர் தான். உச்சநீதிமன்றமே உறுதி செய்த பின்னர் உயர்கல்வி அமைச்சர் குழப்பக் கூடாது. துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க நடவடிக்கை தேவை” என…
Anbumani Ramadoss: “பதவி விலகிய 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் த.வெ.கவில் இணைந்தது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது; அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக்…
Vilathikulam Student Case: விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை – படுகொலை வழக்கில், குற்றவாளிக்கு இரட்டைத் தூக்கு வரவேற்கத்தக்கது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்