கரூரில் 39 பேர் உயிரிழப்பு.. விசாரணை தொடக்கம்.. டேவிட்சன் தேவாசீர்வாதம்!

Karur stampede: “கரூரில் 39 பேர் தங்களின் உயிரை இழந்துள்ளனர்; முதல்கட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன” என ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார்.

Published on: September 28, 2025 at 12:16 pm

கரூர், செப்.28, 2025: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடிகர் விஜய் கரூரில் சனிக்கிழமை (செப்.27, 2025) பேரணி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் பேட்டி

இந்த நிலையில் சம்பவ பகுதியில் காவல்துறை கூடுதல் இயக்குனர் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல் கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், பேசிய டேவிட்சன் தேவாசீர்வாதம், “நாம் முதற்கட்ட விசாரணையை முடிக்க வேண்டும். முப்பத்தொன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க : அரசியல் கட்சி கூட்டத்தில் 39 உயிர்களை இழந்துள்ளோம்.. மு.க ஸ்டாலின் வேதனை

பிரதமர் நரேந்திர மோடியுடன் கனடா பிரதமர் சந்திப்பு.. 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து.. முழு விவரம்!
India - Canada Agreements

பிரதமர் நரேந்திர மோடியுடன் கனடா பிரதமர் சந்திப்பு.. 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com