Yashasvi Jaiswal | புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் (எம்சிஏ) நடைபெற்று வரும் 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.
Yashasvi Jaiswal | புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் (எம்சிஏ) நடைபெற்று வரும் 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.
Published on: October 25, 2024 at 2:35 pm
Yashasvi Jaiswal | 2024 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். மேலும், சர்வதேச அளவில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டுக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
நடப்பு காலண்டர் ஆண்டில் டெஸ்டில் ரன் குவித்த இரண்டாவது முன்னணி வீரர் ஜெய்ஸ்வால் ஆவார். இவர், 2024 இல் 10 போட்டிகளில் 1007 ரன்களை குவித்துள்ளார். ஜெய்ஸ்வால் இரண்டு சதங்கள் மற்றும் 6 அரை சதங்கள் உட்பட 59.23 சராசரியில் தனது ரன்களை எடுத்துள்ளார். ஜோ ரூட் 14 போட்டிகளில் 1305 ரன்கள் குவித்துள்ளார். ஜெய்ஸ்வாலின் சராசரி 59.23 ஆகும்.
இந்தப் பட்டியலில் சுப்மன் கில் ஒன்பது ஆட்டங்களில் 49.42 சராசரியுடன் மூன்று சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்களின் உதவியுடன் 692 ரன்கள் எடுத்துள்ளார். எனினும், இந்தப் படடியலில் இங்கிலாந்து பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ரூட்டைத் தவிர, பென் டக்கெட், ஒல்லி போப், ஹாரி ப்ரூக், சாக் க்ராலி மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜேமி ஸ்மித் ஆகியோர் 2024 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் ரன் தரவரிசையில் இடம்பிடித்துள்ள மற்ற வீரர்கள் ஆவார்கள்.
இதையும் படிங்க டி-20 போட்டியில் அதிக ஸ்கோர்: இந்தியா சாதனையை 11 நாள்களில் முறியடித்த ஜிம்பாப்பே!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com