உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரின் 5-வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.
உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரின் 5-வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.
Published on: November 30, 2024 at 10:39 pm
Updated on: November 30, 2024 at 10:42 pm
World Chess Championship 2024 | உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. நவம்பர் 25 ஆம் தேதி துவங்கிய இந்த தொடர் டிசம்பர் 3 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையில் நடைபெறுகிறது. இந்த போட்டி 14 சுற்றுகள் கொண்டது.
இந்நிலையில் குகேஷ் முதல் சுற்றில் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் இரண்டாவது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் மற்றும் டிங் லிரென் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.
3வது சுற்றில் மீண்டும் எழுந்து வந்த குகேஷ் வெற்றி பெற்றார். இதனால் இருவரும் 1.5-1.5 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்தனர். 4வது சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தநிலையில், இன்று நடைபெற்ற 5ஆவது சுற்று ஆட்டத்தில் 40 ஆவது நகர்வில் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. 5 போட்டிகள் முடிவில் 2.5-2.5 என்ற புள்ளி கணக்கில் இருவரும் சமநிலையில் உள்ளனர். 6வது போட்டி நாளை (டிச.1) இந்திய நேரப்படி 2.30 மணியளவில் ஒளிபரப்பாகும்.
இதையும் படிங்க லக்னோ பேட்மிண்டன்; வெளுத்துவிட்ட பி.வி சிந்து: நாளை சீன வீராங்கனை உடன் மோதல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com