லக்னோ அணிக்கு காரியம் செய்த ஷ்ரேயாஸ் ஐயர்.. மீண்டெழுந்த பஞ்சாப்.. ப்ளேஆஃப் வாய்ப்பு எப்படி?

Shreyas Iyer’s Maiden IPL Hundred : ஷ்ரேயஸ் ஐயர் தனது முதல் ஐ.பி.எல் சதத்துடன் பஞ்சாப் கிங்ஸ் அணியை பிளேஆஃப் சுற்றில் நம்பிக்கையுடன் வைத்துள்ளார்.

Published on: May 24, 2026 at 12:07 am

புதுடெல்லி, மே 24, 2026: ஷ்ரேயஸ் ஐயர் தனது முதல் ஐ.பி.எல் சதத்துடன் பஞ்சாப் கிங்ஸ் அணியை பிளேஆஃப் போட்டியில் மீண்டும் நம்பிக்கையுடன் நிறுத்தினார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், வெற்றியை உறுதி செய்த சிக்ஸருடன் அவர் 101 ரன்கள் அடித்து அசத்தினார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி, ஆறு தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு பிளேஆஃப் வாய்ப்பை இழக்கும் நிலையில் இருந்தது. இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஷ்ரேயஸ் அய்யர் தனது முதல் ஐ.பி.எல் சதம் (101)* அடித்து அணியை மீண்டும் ப்ளே ஆஃப் போட்டியில் வைத்தார்.

அவர் அடித்த வெற்றி சிக்ஸர், ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்தப் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 196/6 ரன்கள் எடுத்தது. அந்த அணியில், ஜோஷ் இங்கிலிஸ் (72), ஆயுஷ் படோனி (43), அப்துல் சமத் (37)* ஆகியோரின் ஆட்டம் லக்னோவுக்கு வலுவான ஸ்கோர் கொடுத்தது.

இந்நிலையில், பஞ்சாப் அணியின் தொடக்கத்தில் மொஹம்மது ஷாமி இரண்டு விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினார். தொடர்ந்து, பஞ்சாப் அணியில் ப்ரப்சிம்ரன் சிங் (69) மற்றும் ஷ்ரேயஸ் அய்யர் இணைந்து 140 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.

இந்த கூட்டணி, பஞ்சாப் அணியின் சரிவு நிலையை மீட்டது. இந்தப் போட்டியில், ஷ்ரேயாஸ் ஐயர், ஆரம்பத்தில் அழுத்தத்தை சமாளித்து விளையாடினார., பின்னர் சிக்ஸர்கள், பவுண்டரிகள் மூலம் ஆட்டத்தை கட்டுப்படுத்தினார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி இன்னும் பிளேஆஃப் இடத்தை உறுதி செய்யவில்லை. எனினும், இந்த வெற்றி பஞ்சாப்பின் ப்ளே ஆஃப் வாய்ப்பை இன்னமும் உயிருடன் வைத்துள்ளது.
இதற்கிடையில், ஷ்ரேயாஸ் ஐயரின் சதம், அணிக்கு ஆக்சிஜன் அளித்தது என ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

இதையும் படிங்க : விராட் கோலி – டிராவிஸ் ஹெட்டுடன் கைகுலுக்க மறுப்பு: மைதானத்தில் சூடான மோதல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com