Maha shivratri 2025: மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் விடிய விடிய தரிசனம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Maha shivratri 2025: மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் விடிய விடிய தரிசனம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: February 26, 2025 at 10:46 am
உலகெங்கிலும் மகா சிவராத்திரி 2025 பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கும் இந்த மகா சிவராத்திரி மறுநாள் காலை வரை நீடிக்கிறது. இதைத்தொடர்ந்து சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு கால பூஜைகள் இரவு 10 மணிக்கு நடைபெறுகின்றன.
சிவராத்திரியை முன்னிட்டு மொத்தம் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. அதன்படி, இரண்டாம் பூஜை இரவு 11 மணிக்கு தொடங்கி 11 :40 மணி வரையிலும் மூன்றாம் பூஜை 12 மணிக்கு தொடங்கி 12 :40 மணி வரையிலும் நான்காம் கால பூஜை நள்ளிரவு ஒரு மணிக்கு தொடங்கி 1:40 மணி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மகா சிவராத்திரி 2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகாரர்கள் சிவனை எப்படி வழிபடுவது? பலன்கள் என்ன?
இந்த நான்கு கால பூஜை அபிஷேகத்திற்கு தேவையான தயிர், இளநீர், பால், பன்னீர், தேன், பழ வகைகள், மஞ்சள் பொடி, நெய் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை பக்தர்களும் வழங்கலாம். அதன்படி பக்தர்கள் பிப்ரவரி 26 ஆம் தேதி மாலைக்குள் மீனாட்சி கோவில் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் இரவு முழுவதும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று தரிசனம் செய்யலாம் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : Maha Shivratri 2025: மகா சிவராத்திரி விரதம், பூஜிக்க உகந்த நேரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com