Maha Shivratri 2025: மகா சிவராத்திரி விரதம், பூஜிக்க உகந்த நேரம்!

Maha Shivratri 2025 Date and Time: மகா சிவராத்திரியில் எந்தத் தேதியில் பூஜிக்கலாம். எப்படி பூஜிக்கலாம்? விரத முறை என்ன?

Published on: February 25, 2025 at 3:36 pm

Updated on: February 25, 2025 at 3:37 pm

சிவபெருமானுக்கு உகந்த இரவான மகா சிவராத்திரி மங்களகரமான ஓர் இந்து பண்டிகையாகும். இந்த நாள் சிவ தாண்டவம் செய்த புனித நாளாக நம்பப்படுகிறது. இது படைப்பு மற்றும் அழிவை குறிக்கும் தெய்வீக நடனம் ஆகும். மேலும் இந்த நாளில் தான் சிவபெருமான் பார்வதியை மணந்தார் என்றும் புராண இதிகாசங்கள் கூறுகின்றன.

ஆகையால் மகா சிவராத்திரி என்பது, பிரபஞ்ச சக்திகளால் சீரமைக்கப்பட்ட ஓர் நாள் என கூறப்படுகிறது. இந்த நாளில் நாம் ஆன்மீக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இந்த நாளில் நீங்கள் சிவபெருமானை வணங்கினால் அது உங்கள் வாழ்க்கையின் எதிர்மறை விஷயத்தில் இருந்து உங்களை நேர்மறையான வாழ்க்கைக்குத் திருப்பும். அமைதி மற்றும் செழிப்பை உணர்த்தும். சிவபெருமானின் ஆசிகளை பெற உதவும் எனவும் நம்பப்படுகிறது. மேலும் சிவராத்திரி ஆண் மற்றும் பெண் பால் இணைப்பையும் குறிக்கிறது.

இதையும் படிங்க : பிரபஞ்சத்தை இயக்கும் 9 விதிகள் ; கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொன்னவை என்ன ?

2025 மகா சிவராத்திரி எப்போது?

மகா சிவராத்திரி என்பது ஒவ்வொரு ஆண்டும் தேய்பிறை நிலவில் 14 ஆவது இரவில் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை வருகிறது.
இந்த மகா சிவராத்திரி காலை 11 மணி முதல் தொடங்குகிறது. மறுநாள் காலை 8 :54 மணி வரை மகா சிவராத்திரி இருக்கும்.

பூஜை செய்ய உகந்த நேரங்கள்

தற்போது நாம் மகா சிவராத்திரியை முன்னிட்டு பூஜை செய்ய உகந்த நேரங்கள் குறித்து பார்க்கலாம். மகா சிவராத்திரியை முன்னிட்டு நஷீதகால பூஜை செய்ய பிப்ரவரி 27ஆம் தேதி அதிகாலை 12:8 மணி முதல் 12:58 AM மணி வரை உகந்த நேரம் ஆகும். சிவராத்திரியின் நோன்பு திறக்கும் நேரம் பிப்ரவரி 27ஆம் தேதி 6: 48 மணி முதல் காலை 8 :54 மணி வரை ஆகும்.

மகா சிவராத்திரி பூஜை நேரங்கள்

  • ராத்திரி முதல் பிரகார் பூஜை செய்ய நேரம் பிப்ரவரி 26 ஆம் தேதி மாலை 6:18 முதல் 9 :25 வரை ஆகும்.
  • ராத்திரி இரண்டாம் பிரகார் பூஜை செய்ய நேரம் பிப்ரவரி 27ஆம் தேதி மாலை 9 :26 முதல் காலை 12:33 வரை ஆகும்.
  • ராத்திரி மூன்றாம் பிரகார் பூஜை செய்ய நேரம் பிப்ரவரி 27ஆம் தேதி அதிகாலை 12 :38 முதல் அதிகாலை 3 :40 மணி வரை ஆகும்.

விரதம் மேற்கொள்ளும் நேரம்

பொதுவாக மகா சிவராத்திரியை முன்னிட்டு மிஷின காலத்தில் சிவ பக்தர்கள் விரதம் மேற்கொள்வார்கள். இம்முறையைப் பொறுத்தவரை பிப்ரவரி 27ஆம் தேதி காலை 6 48 மணி முதல் காலை 8 :54 மணி வரை விரதம் முடிப்பதற்கான சிறந்த நேரம் ஆகும்.
2025 மகா சிவராத்திரி பிப்ரவரி 26ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
மகா சிவராத்திரியை பொருத்தமட்டில் சதுர்த்தி திதி பிப்ரவரி 26 ஆம் தேதி காலை 11 :08 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 27ஆம் தேதி காலை 8 :54 மணிக்கு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியாவில் நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் : எங்கெங்கு அமைந்துள்ளன தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com