திருச்செந்தூர் கோவிலில் மார்கழி பூஜை நேரம் மாற்றம்; ஆணையர் அறிவிப்பு!

Tiruchendur | திருச்செந்தூர் கோவிலில் மார்கழி பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக ஆணையர் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பூஜை மாற்றங்கள் தொடர்பான முழு விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

Published on: December 10, 2024 at 11:08 am

Updated on: December 10, 2024 at 11:12 am

Tiruchendur | திருச்செந்தூர் முருகன் கோவிலில் மார்கழி மாத பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தமிழ் மாதமான மார்கழி வருகிற டிச.16ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் ஜனவரி 13-ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நாட்களில் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

காலை 5.15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் காலசந்தி பூஜை, 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், காலை 8.45 முதல் 9 மணிக்குள் உச்சிகால தீபாராதனை நடைபெறும். பின்னர் மாலை 3.00 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும், இரவு 8 மணி முதல் 8.30க்குள் பள்ளியறை தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மார்கழி 29 (ஜன.13) (திங்கள்கிழமை) அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. மற்ற காலங்கள் அனைத்தும் மார்கழி மாத பூஜைகள் கால அட்டவணைப்படி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பிரபஞ்சத்தை இயக்கும் 9 விதிகள் ; கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொன்னவை என்ன ?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com