அரசியலும் வேண்டாம்; குடும்பமும் வேண்டாம்.. லாலு மகளின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்?

Rohini Acharya: ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகிய லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா, தேஜஸ்வி மற்றும் சஞ்சய் யாதவ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Published on: November 16, 2025 at 12:02 pm

Updated on: November 16, 2025 at 12:04 pm

பாட்னா, நவ.16, 2025: 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவிய நிலையில், தேஜஸ்வி யாதவின் சகோதரியும் லாலு பிரசாத்தின் மகளுமான ரோகிணி ஆச்சார்யா சனிக்கிழமை (நவ.15, 2025) அரசியலை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். இது தொடர்பாக ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “நான் அரசியலை விட்டு விலகுகிறேன், என் குடும்பத்தையும் துறக்கிறேன்… சஞ்சய் யாதவும் ரமீஸும் என்னிடம் இதைச் செய்யச் சொன்னார்கள்… எல்லாப் பழிகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து இருந்தார்.

என்ன காரணம்? உள்கட்சி பிரச்னை?

இது தொடர்பாக பேசிய கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவர், “கண்ணுக்குத் தெரிந்த விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. தேஜஸ்வியின் முக்கிய உதவியாளராக சஞ்சய் யாதவின் அந்தஸ்து தொடர்பாக ரோகிணிக்கு பிரச்சினைகள் உள்ளன. குடும்பத்தில் சில உள் சண்டைகள் இருக்கலாம், இது ரோகிணியின் வெளியேற்றத்துக்கு வழிவகுத்தது” என்றார்.

முதல் முறையல்ல..

ரோகிணிக்கும் சஞ்சய் யாதவிற்கும் இடையே இவ்வாறு பதற்றங்கள் உருவாகுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, 2024 மக்களவைத் தேர்தலில் சரண் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்போது, தனது சகோதரர் தேஜஸ்வி மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் சஞ்சய் ஆகியோருடன் கட்சியில் அதிக செல்வாக்கு வழங்கப்படாததால் இந்தத் தோல்வி ஏற்பட்டதாக ரோகிணி வருந்தியதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இதனை பின்னர் ரோகிணி மறுத்தார். இந்த நிலையில், ரோகிணி தரப்பிடம் இருந்து மீண்டும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு சஞ்சய் யாதவ் இன்னும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2013ல் திடீர் மாயம்.. 2015ல் திருமணம்- விவாகரத்து.. யார் இந்த பெண் மருத்துவர் ஷாஹீன் ஷாஹீத்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com