ED summoned Gokulam Gopalan: ‘எம்புரான்’ படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கான காரணம் இதோ!
ED summoned Gokulam Gopalan: ‘எம்புரான்’ படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கான காரணம் இதோ!
Published on: April 8, 2025 at 1:49 pm
திருவனந்தபுரம், ஏப்.8 2025: தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான கோகுலம் கோபாலனுக்கு அமலாக்க இயக்குநரகம் (ED) புதிய சம்மன் அனுப்பி உள்ளது. அதில், ஏப்ரல் 22 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பிரபல மலையாள திரைப்படமான எம்புரான் படத்தின் தயாரிப்பாளர்களில் கோகுலம் கோபாலனும் ஒருவர் ஆவார். முன்னதாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கட்கிழமை (ஏப்.7 2025) கோகுலம் கோபாலனிடம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில், இந்த சம்மன் வந்துள்ளது. அமலாக்க அமலாக்க இயக்குநரகம் கோபாலன் சமர்ப்பித்த ஆவணங்களை மதிப்பாய்வு செய்து அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கோகுலம் கோபாலன் நிறுவனத்தில் அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் மீறல்கள் நடந்துள்ளனவா என்பதை அதிகாரிகள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
கோகுலம் கோபாலனுக்கு சம்மன் ஏன்?
படத்தின் தயாரிப்பாளர்களுடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகளில் வருமான வரித் துறையும் ரெய்டு நடத்தியுள்ளது. இதற்கிடையில், FEMA மீறலுடன் தொடர்பு இருக்கலாம் என அமலாக்கத் துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையில், எம்புரான் படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூருக்கும் வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், லூசிபர் மற்றும் மரக்கர்: லயன் ஆஃப் தி அரேபியன் சீ போன்ற அவரது முந்தைய படங்களுடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகள் குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.
முன்னதாக, 2022 ஆம் ஆண்டில், கேரளாவில் உள்ள ஐந்து முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஐடி சோதனைகள் நடத்தப்பட்டன, அவற்றில் பெரும்பாவூருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ஆசீர்வாத் சினிமாஸ் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது.. ‘மகிழ்ச்சியாக உணர்கிறேன்’ என்கிறார் நடிகை சனம் செட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com