புதுடெல்லி, செப்.1, 2026: சத்தீஸ்கரில் இன்று மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல் இமாச்சல பிரதேசம், பீகார், கிழக்கு மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, உத்தரகாண்ட் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீர், ஹரியானா, சண்டிகர், மேற்கு வங்காளம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சில இடங்களில் மின்னல் தாக்கத்துக்கும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதனால் இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வானிலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று பிற்பகல் லேசான மழையுடன் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரம்: ஹேக் தீர்ப்பை நிராகரித்த இந்தியா! “நீதிமன்றத்துக்கு அதிகாரமே இல்லை”
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்