காதல், அதீத நெருக்கம்; 7 மாத கர்ப்பம்: 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

Delhi | கர்ப்பிணி காதலியை கொன்று புதைத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

Published on: October 26, 2024 at 4:17 pm

Delhi | டெல்லி நங்லோய் பகுதியை சேர்ந்த 19 வயதான இளம்பெண் சோனி. இவரும் அதேபகுதியை சேர்ந்த சஞ்சு என்ற சலீம் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். நாளடையில் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சோனி கர்ப்பமுற்றார். 7 மாத கர்ப்பிணியான அவர், தனது காதலன் சலீமை திருமணம் செய்துக்கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.

இதில் நாட்டம் இல்லாத சலீம் தனது நண்பர்கள் இருவருடன் இணைந்து திருமணம் செய்துக் கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஹரியானா மாநிலம் ரோக்தகி நகருக்கு கூட்டிச்சென்றார். அங்கு அவரை கொன்று புதைத்துள்ளார்.

இந்த நிலையில் பெண் தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் சலீம் முதலில் கைது செய்யப்பட்டார். அவருக்கு துணை போன நண்பர்களில் ஒருவர் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தப்பித்து ஓடிவிட்டார். மற்றொருவரை போலீசார் கைது செய்துவிட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க டெல்லியில் அதிர்ச்சி; கட்டடத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை: ஷாக்கிங் வீடியோ!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com