Pahalgam Attack: பஹல்காம் தாக்குதலின் போது, பயங்கரவாதிகளுக்கு உதவிய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Pahalgam Attack: பஹல்காம் தாக்குதலின் போது, பயங்கரவாதிகளுக்கு உதவிய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Published on: September 24, 2025 at 9:42 pm
ஜம்மு, செப்.24, 2025: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில், 2025 ஏப்ரல் 22 தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்நிலையில், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு தளவாட உதவிகளை வழங்கிய ஒருவரை ஜம்மு காஷ்மீர் காவல்துறை புதன்கிழமை (செப்.24, 2025) கைது செய்தது.
ஜூலை மாதம் நடந்த ஆபரேஷன் மகாதேவின் போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை பகுப்பாய்வு செய்த பின்னர், 26 வயதான முகமது யூசுப் கட்டாரியா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை கொண்டு சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை, போலீஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. மேலும், கைது செய்யப்பட்ட பின்னர் அவர் 14 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், “லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முக்கிய உறுப்பினரும் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான கட்டாரியா, இரண்டு நாட்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டார், அதன் பிறகு அவர் முறையாக கைது செய்யப்பட்டார்” என போலீசார் தெரிவித்துள்ளனர். போலீஸ் வட்டாரங்களின்படி, இந்த ஆண்டு ஜூலை மாதம் டாச்சிகாம் காட்டில் ஆபரேஷன் மகாதேவின் கீழ் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தளவாட உதவி வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : லடாக் வன்முறை.. பா.ஜ.க அலுவலகம் தீக்கிரை.. 4 பேர் மரணம்.. 50 பேர் காயம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com