உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி; நவ. 11 இல் பதவி ஏற்கிறார் சஞ்சீவ் கண்ணா!

SC Justice Sanjiv Khanna | உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் கண்ணா நவம்பர் 19ஆம் தேதி பொறுப்பு ஏற்கிறார்.

Published on: October 24, 2024 at 11:23 pm

SC Justice Sanjiv Khanna | உச்ச நீதிமன்றத்தில் தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட்டின் பதவிக்காலம் நவம்பர் 10 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நவம்பர் 11ஆம் தேதி பதவி ஏற்கிறார்.

இவர் உச்ச நீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதி என்ற சிறப்பை பெறுகிறார்.1960 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி பிறந்த சஞ்சீவ் கண்ணா, டெல்லியில் வழக்கறிஞராக பதிவு செய்து தனது பணியை தொடர்ந்து வந்தார். இவர் டெல்லி உயர்நீதிமன்றம், தீர்ப்பாயம் என வழக்கறிஞராக தனது பணியை தொடர்ந்தார்.

இந்த நிலையில் 2005 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்றார். தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு, உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணி நிரந்தரம் பெற்றார். இதை அடுத்து, 2019 ஜனவரி மாதம் 18ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க உச்ச நீதிமன்ற நீதி சிலையில் மாற்றம்: பார் கவுன்சில் ஆட்சேபம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com