Jharkhand | ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் வேட்புமனு முன்மொழிவாளர் மண்டல் முர்மு, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
Jharkhand | ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் வேட்புமனு முன்மொழிவாளர் மண்டல் முர்மு, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
Published on: November 4, 2024 at 1:36 pm
Jharkhand | ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வேட்புமனுவை முன்மொழிந்தவர் மண்டல் முர்மு. இவர், ழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் சிதோ-கன்ஹுவின் வழித்தோன்றல் ஆவார். இந்த நிலையில் இவர் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இவரை பாஜக சால்வை அணிவித்து வரவேற்ற மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், அவருக்கு பாரதிய ஜனதா உறுப்பனர் அட்டையையும் வழங்கினார்.
செய்தியாளர்களிடம் பேசிய மண்டல் முர்மு, தான் சிதோ-கன்ஹுவின் ஆறாவது வழித்தோன்றல் என்றார். தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவின் கொள்கை மற்றும் மக்கள் நலத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு கட்சியில் சேர்ந்தேன். பர்ஹெய்த் சட்டமன்றத் தொகுதியில் இருந்து முதல்வர் ஹேமந்த் சோரனின் முன்மொழியப்பட்ட பிறகு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் பல சிக்கல்களை சந்தித்தேன்” என்றார்.
அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “சந்தால் பர்கானாவில் முர்முவுடன் பாஜக இணைந்து செயல்படும். அவரது ஒத்துழைப்போடு, சந்தால் பர்கானாவில் இருந்து வங்கதேச ஊடுருவலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உத்தி வகுக்கப்படும்” என்றார்.
முன்னதாக, அக்டோபர் 28ஆம் தேதியன்று, ஜே.எம்.எம் பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான சுப்ரியோ பட்டாச்சார்யா, “அக்டோபர் 27ல் மண்டல் முர்முவை கடத்த முயற்சிகள் நடந்தன” எனக் குற்றம் சாட்டினார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல்: மும்பையில் இளம்பெண் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com