Mumbai Rain alert: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது
Mumbai Rain alert: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது
Published on: September 27, 2025 at 2:14 pm
மும்பை, செப்.27, 2025: மகாராஷ்டிராவில் புனே, அகமதுநகர், பர்பானி, ஹிங்கோலி மற்றும் நான்டெட் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் 27 சனிக்கிழமை தொடங்கி செப்டம்பர் 29 வரை மும்பையில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
மேலும், மும்பையைத் தவிர, அதன் சுற்றியுள்ள பகுதிகளான பால்கர், தானே மற்றும் ராய்காட் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை
இதற்கிடையில், மகாராஷ்டிராவில் உள்ள ஜல்னா, பீட், சோலாப்பூர் மற்றும் பீட் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, “இடி, காற்றுடன் கூடிய கன மழை மற்றும் மேற்பரப்பு காற்றுடன் மிதமான முதல் தீவிர மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மற்ற மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு
மேலும், “சத்தீஸ்கர், கேரளா மற்றும் மாஹே, கொங்கண் மற்றும் கோவா, மகாராஷ்டிரா, வடக்கு உட்புற கர்நாடகா, ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய இடங்களில் சனிக்கிழமை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஹோலி வண்ணங்களை மாணவிகள் மீது பூசிய சாமியார்… டெல்லியில் அடுத்த பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com