Bihar : பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி கொடுமைப்படுத்திய அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
,
Bihar : பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி கொடுமைப்படுத்திய அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
,
Published on: June 22, 2025 at 1:38 pm
பாட்னா, ஜூன் 22 2025: திருமணமாகி 3 குழந்தைகள் பெற்ற நிலையிலும், தீராத சந்தேகம் காரணமாக பெண்ணிடம் தவறாக நடந்த அவரது கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது என இந்தியா டுடே ஆங்கில செய்தி சேனல் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் பல நாட்கள் வீட்டின் தனிமை அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரின் அந்தரங்க உறுப்புகளில் மிளகாய் பொடி தேய்க்கப்பட்டுள்ளது. மேலும் அவரது அவருக்கு எலக்ட்ரிக் ஷாக் உள்ளிட்ட கொடுமைகளும் அறங்கேறியுள்ளன. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது கணவர் 40 வயதான சத்ருகன் மற்றும் அவரது தாயார் துக்னி தேவி மற்றும் சகோதரர் சுமேஷ் ராய் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு குறித்து காவல் துறை அதிகாரி வினய் குமார் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், “இது மிகவும் சீரியஸான விஷயம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிகப்பெரிய அளவில் கொடுமைகள் நடந்துள்ளன. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 3 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கணவருக்கு அவர் மீது சந்தேகம் காரணமாக இந்தக் கொடுமைகள் அறங்கேற்றப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; ஹரித்வாரில் பா.ஜனதா பெண் பிரமுகர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com