அமேதியில் அரசுப் பள்ளி ஆசிரியர், மனைவி, 2 மகள்கள் சுட்டுக்கொலை!

அமேதியில் அரசுப் பள்ளி ஆசிரியர், அவரின் மனைவி மற்றும் 2 மகள்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Published on: October 3, 2024 at 11:04 pm

Govt School Teacher Shot Dead In Amethi | உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள ஒரு வயது கைக்குழந்தை மற்றும் ஆறு வயது பெண் குழந்தை உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் இன்று (செப்.3, 2024) சுட்டுக்கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்டவர் 35 வயதான சுனில் மற்றும் அவரது மனைவி பூனம் (32) ஆவார். இவர்கள் பவானியில் வாடகை வீட்டில் வசித்துவந்தனர். சுனில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆவார். இந்த நிலையில் அவர் உள்பட முழு குடும்பமும் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து, அமேதி காவல் கண்காணிப்பாளர் (SP) அனூப் குமார் சிங், “சுனில் ரேபரேலியை பூர்வீகமாகக் கொண்டவர். பன்ஹவுனாவில் உள்ள அரசுப் பள்ளியில் பணிபுரிந்துவந்தார். முதற்கட்ட விசாரணையில், சந்தன் வர்மா என்பவர் மீது 1989ஆம் ஆண்டு பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளனர். இந்த ஈவ் டீசிங் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், “இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார். மேலும், “அமேதி மாவட்டத்தில் இன்று நடந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்.

துயரத்தின் இந்த நேரத்தில், உத்தரப் பிரதேச அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் நிற்கிறது. இந்த சம்பவத்தின் குற்றவாளிகள் எக்காரணம் கொண்டும் தப்ப முடியாது, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

அகிலேஷ் யாதவ்

எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சம்பந்தப்பட்ட வீடியோவை பகிர்ந்து யாராவது இருக்கிறீர்களா? எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.

இதையும் படிங்க

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா! Justice Nagarathna

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி

Justice Nagarathna : உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் நோக்கில் நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்….

மோடி அரசு எந்த திசையும், திட்டமும் இன்றி பயணிக்கிறது.. ராகுல் காந்தி Rahul Gandhi

மோடி அரசு எந்த திசையும், திட்டமும் இன்றி பயணிக்கிறது.. ராகுல் காந்தி

Rahul Gandhi: மோடி அரசு எந்த திசையும் திட்டமும் இன்றி பயணிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான, ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்….

பாலக்காட்டில் மார்க்சிஸ்ட், பாஜக ரகசிய கூட்டணி.. காங்கிரஸ்! Kerala election 2026

பாலக்காட்டில் மார்க்சிஸ்ட், பாஜக ரகசிய கூட்டணி.. காங்கிரஸ்!

Kerala election 2026: பாலக்காட்டில் சிபிஎம்–பாஜக ‘ரகசிய புரிதல்’ தெளிவாக உள்ளது என்று கே.சி. வேணுகோபால் குற்றம் சாட்டியுள்ளார்….

புனித ரமலான் மேற்கு ஆசியாவில் அமைதியை கொண்டுவரும்.. ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடி பேச்சு! Narendra Modi

புனித ரமலான் மேற்கு ஆசியாவில் அமைதியை கொண்டுவரும்.. ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடி

Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபருடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது….

பாஜகவுக்கு வாக்களித்த இஸ்லாமிய பெண் எம்.எல்.ஏ? யார் இந்த சோஃபியா ஃபிர்தோஸ்? Sofia Firdous

பாஜகவுக்கு வாக்களித்த இஸ்லாமிய பெண் எம்.எல்.ஏ? யார் இந்த சோஃபியா ஃபிர்தோஸ்?

Sofia Firdous: ஒரிசாவின் காங்கிரஸ் எம்எல்ஏவான சோஃபியா ஃபிர்தோஸ், ராஜ்ய சபா தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com