Govt School Teacher Shot Dead In Amethi | உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள ஒரு வயது கைக்குழந்தை மற்றும் ஆறு வயது பெண் குழந்தை உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் இன்று (செப்.3, 2024) சுட்டுக்கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்டவர் 35 வயதான சுனில் மற்றும் அவரது மனைவி பூனம் (32) ஆவார். இவர்கள் பவானியில் வாடகை வீட்டில் வசித்துவந்தனர். சுனில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆவார். இந்த நிலையில் அவர் உள்பட முழு குடும்பமும் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து, அமேதி காவல் கண்காணிப்பாளர் (SP) அனூப் குமார் சிங், “சுனில் ரேபரேலியை பூர்வீகமாகக் கொண்டவர். பன்ஹவுனாவில் உள்ள அரசுப் பள்ளியில் பணிபுரிந்துவந்தார். முதற்கட்ட விசாரணையில், சந்தன் வர்மா என்பவர் மீது 1989ஆம் ஆண்டு பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளனர். இந்த ஈவ் டீசிங் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், “இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார். மேலும், “அமேதி மாவட்டத்தில் இன்று நடந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்.
துயரத்தின் இந்த நேரத்தில், உத்தரப் பிரதேச அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் நிற்கிறது. இந்த சம்பவத்தின் குற்றவாளிகள் எக்காரணம் கொண்டும் தப்ப முடியாது, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
அகிலேஷ் யாதவ்
எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சம்பந்தப்பட்ட வீடியோவை பகிர்ந்து யாராவது இருக்கிறீர்களா? எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க
Rajnath singh: “பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸ் எல்லைக்குள் இருக்கின்றன; ஆபரேஷன் சிந்தூர் ட்ரெய்லர்தான்” என எச்சரித்துள்ளார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்….
Seema Singhs nomination Rejected: பீகாரில் பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பெயர் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் போஜ்புரி நடிகை ஆவார்….
Narendra Modi: பீகார் சட்டமன்ற தேர்தலில், ஒன்றிணைந்து தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்….
Ravi Naik passes away: கோவா வேளாண் அமைச்சரும் முன்னாள் முதல்வருமான ரவி நாயக் மாரடைப்பால் காலமானார்….
Bengaluru: பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் ரூபாய் 50 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் கடத்தி வந்த வெளிநாட்டு பயணிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்