‘ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதி இல்லை’: ஃபருக் அப்துல்லா

Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் ஓர் பகுதி கிடையாது என ஃபருக் அப்துல்லா கூறியுள்ளார்.

Published on: October 25, 2024 at 10:18 pm

Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி அமைத்து இரண்டு வாரங்கள் கூட கடக்காத நிலையில், இரு அதிபயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. முதலாவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, கட்டட தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வெளிமாநில கட்டடத் தொழிலாளர்கள் தங்கி இருந்த விடுதிக்குள் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர்.

இதில் உள்ளூரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உட்பட ஆறு பேர் பலியானார்கள். இந்தச் சம்பவம் நாடு முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் நேற்று புதிதாக பயங்கரவாதிகள் பாராமுல்லா மாவட்டத்தில் தாக்குதல் நடத்தினார்கள். ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.


இந்தத் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட பயங்கரவாதிகள் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் பாரோக் அப்துல்லா ஜம்மு காஷ்மீரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் ஓர் பகுதி கிடையாது” என அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஃபருக் அப்துல்லா, ” பாகிஸ்தான் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்; இந்தியாவுடன் இணக்கமாக செல்வது எப்படி என்பது குறித்து சிந்திக்க வேண்டும். இரு நாடுகளும் நட்புறவில் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். இதை மறந்துவிட்டு பயங்கரவாதத்தின் பாதையில் பயணித்தால் நிலைமை படு மோசமாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; இரண்டு வீரர்கள் உட்பட நான்கு பேர் மரணம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com