ECI issue: இந்திய தேர்தல் ஆணையம், தபால் வாக்குகள் எண்ணிக்கையில் புதிய மாறுதலை கொண்டுவந்துள்ளது.
ECI issue: இந்திய தேர்தல் ஆணையம், தபால் வாக்குகள் எண்ணிக்கையில் புதிய மாறுதலை கொண்டுவந்துள்ளது.
Published on: September 26, 2025 at 5:02 pm
புதுடெல்லி, செப்.26, 2025: தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்கு எண்ணப்படும். அதைத் தொடர்ந்து காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இந்த நிலையில், தற்போது புதிய வழிகாட்டு விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்றும் தபால் வாக்குகளை எண்ணி முடித்த பின்னரே மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன்மூலம் தபால் வாக்குகளின் நம்பிக்கைதன்மையை மேலும் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுருங்கச்சொல்வதென்றால், தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்படாமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இதை நீங்க பார்க்கலீயா? அருந்ததி ராய்க்கு எதிரான பொதுநல வழக்கு.. மனுதாரருக்கு நீதிபதி கேள்வி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com