Jammu and kashmir | ஜம்மு காஷ்மீரில் மருத்துவர், 5 வெளி மாநில தொழிலாளர்களை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.
Jammu and kashmir | ஜம்மு காஷ்மீரில் மருத்துவர், 5 வெளி மாநில தொழிலாளர்களை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.
Published on: October 21, 2024 at 7:13 am
Updated on: October 21, 2024 at 10:29 am
Jammu and kashmir | ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டம் கஹான்ஜிர் என்ற பகுதியில் வெளி மாநில கட்டிடத் தொழிலாளர்களை நோக்கி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 5 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் உள்ளுறை சேர்ந்த மருத்துவர் ஒருவரும் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நாடு தழுவிய கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை தாங்கிய பயங்கரவாதிகள் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த அந்த பகுதிக்குள் புகுந்து கண் மூடித் தனமாக துப்பாக்கியால் சுட்டு படுகொலையை நிகழ்த்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் உமர் அப்துல்லா, ” காயம் அடைந்த தொழிலாளர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ” அப்பாவி தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள்.
தாக்குதலில் பலியானவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் அமைந்து பத்து நாட்கள் கூட கடக்காத நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் பெண்ணை மணந்த பாஜக பிரமுகர் மகன்; இணையத்தில் வீடியோ வைரல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com