Atishi Marlena: டெல்லியில் உள்ள பெண்கள் கணக்கில் ரூ.2,500 வரவு வைக்கப்படுமா? இன்னும் 4 நாள்கள்தான் உள்ளன என்றார் டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி மர்லேனா.
Atishi Marlena: டெல்லியில் உள்ள பெண்கள் கணக்கில் ரூ.2,500 வரவு வைக்கப்படுமா? இன்னும் 4 நாள்கள்தான் உள்ளன என்றார் டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி மர்லேனா.
Published on: March 4, 2025 at 2:36 pm
புதுடெல்லி மார்ச் 4, 2025: டெல்லியில் உள்ள மகளிர்களின் வங்கிக் கணக்கில் எப்போது ரூபாய் 2500 வரவு வைக்கப்படும் என கேள்வி எழுப்பி உள்ள அம் மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி, இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளன எனவும் கூறியுள்ளார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் 2025 பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 இல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மிக்கு 22 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அக்கட்சியின் வேட்பாளர்கள் 67 இடங்களில் டெபாசிட் இழந்தனர். மேலும் டெல்லி தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவினார்.
அவர் மட்டுமின்றி பல்வேறு முக்கிய தலைவர்கள் தேர்தலில் தோல்வியடைந்தனர். எனினும் மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சராக இருந்த அதிஷி, கல்காஜி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் வாய்ப்பு வழங்கப்பட்டது. மாநிலத்தின் முதலமைச்சராக ரேகா குப்தா உள்ளார். இந்த நிலையில் இன்று புதுடெல்லியில் பேட்டியளித்த அதிஷி, ” டெல்லியில் உள்ள அனைத்து பெண்களின் கணக்குகளிலும் ரூபாய் 2500 வரவு வைக்கப்படும் எனக் கூறி பிரதமர் நரேந்திர மோடி வாக்கு கேட்டார்.
இது பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதம் என்றும் அவர் கூறினார். அவ்வாறு வாக்கு கொடுத்து இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு இன்னும் அமல்படுத்த நான்கு நாட்கள் மட்டுமே மீதம் உள்ளது. தற்போது நான் இந்த திட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்; டெல்லியில் உள்ள அனைத்து பெண்களின் கணக்கிலும் எப்போது ரூபாய் 2500 வரவு வைக்கப்படும்? என்றார்.
இதையும் படிங்க அரவிந்த் கெஜ்ரிவால் ராஜ்யசபா எம்.பி. ஆக வாய்ப்பு? பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com