Ashwini Vaishnaw | பண்டிகை காலத்தை முன்னிட்டு 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார்.
இது குறித்து அவர், “பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் திருவிழாக்களுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனால் 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கூடுதல் நெரிசலைக் கவனித்துக்கொள்ள 12,500 பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன” என்றார். தொடர்ந்து, “பல ரயில் வழித்தடங்கள், குறிப்பாக பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் வழித்தடங்கள், துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளின் போது அதிக நெரிசலைக் காண்கின்றன” என்றார்.
இதையடுத்து, “கடந்த ஆண்டு 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விழாக்காலத்திற்காக இதுவரை மொத்தம் 5,975 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன” என்றார். துர்கா பூஜை அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்குகிறது, தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படும், சாத் பூஜை இந்த ஆண்டு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Delhi Election 2025: அரவிந்த் கெஜ்ரிவாலின் யமுனை நதி குறித்த பேச்சு கடும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் ஹரியானாவில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பல்வேறு…
Union Budget 2025: பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் 3.0 இன் ‘விக்சித் பாரத்’ திட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு…
Union Budget 2025: 2025- 26 ஆம் ஆண்டுக்கான இந்திய நாட்டின் வரவு செலவு திட்ட அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று ( பிப்ரவரி…
Union Budget 2025 | இந்திய நாட்டின் வரவு செலவு திட்ட அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இது தொடர்ச்சியாக இவரின் எட்டாவது…
Techie rape and murder case: பாதிக்கப்பட்ட 23 வயதான பெண், மென் பொறியாளராக பணிபுரிந்தவர் ஆவார். இவர் 2014ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை…
India 76th Republic Day: நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மிகப்பெரிய அணிவகுப்பு டெல்லியில் இன்று நடந்தது. முன்னதாக தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்