Ashwini Vaishnaw | பண்டிகை காலத்தை முன்னிட்டு 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார்.
இது குறித்து அவர், “பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் திருவிழாக்களுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனால் 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கூடுதல் நெரிசலைக் கவனித்துக்கொள்ள 12,500 பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன” என்றார். தொடர்ந்து, “பல ரயில் வழித்தடங்கள், குறிப்பாக பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் வழித்தடங்கள், துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளின் போது அதிக நெரிசலைக் காண்கின்றன” என்றார்.
இதையடுத்து, “கடந்த ஆண்டு 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விழாக்காலத்திற்காக இதுவரை மொத்தம் 5,975 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன” என்றார். துர்கா பூஜை அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்குகிறது, தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படும், சாத் பூஜை இந்த ஆண்டு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Rajnath singh: “பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸ் எல்லைக்குள் இருக்கின்றன; ஆபரேஷன் சிந்தூர் ட்ரெய்லர்தான்” என எச்சரித்துள்ளார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்….
Seema Singhs nomination Rejected: பீகாரில் பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பெயர் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் போஜ்புரி நடிகை ஆவார்….
Narendra Modi: பீகார் சட்டமன்ற தேர்தலில், ஒன்றிணைந்து தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்….
Ravi Naik passes away: கோவா வேளாண் அமைச்சரும் முன்னாள் முதல்வருமான ரவி நாயக் மாரடைப்பால் காலமானார்….
Bengaluru: பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் ரூபாய் 50 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் கடத்தி வந்த வெளிநாட்டு பயணிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்….
Bihar assembly election: பீகார் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்