Honor Killing in UP: உத்தரப் பிரதேசத்தில் 15 வயதான மாணவியை தந்தை மற்றும் மகன் ஆகியோர் சுட்டு ஆணவ படுகொலை செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன.
Honor Killing in UP: உத்தரப் பிரதேசத்தில் 15 வயதான மாணவியை தந்தை மற்றும் மகன் ஆகியோர் சுட்டு ஆணவ படுகொலை செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன.
Published on: September 29, 2025 at 6:40 pm
முசாபர்நகர், செப்.29, 2025: உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில், 17 வயது சிறுமியை அவரது தந்தை மற்றும் மைனர் சகோதரர் சுட்டுக் கொன்றதாக (இன்று) திங்கள்கிழமை போலீசார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை காந்த்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பேத்தா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் என்.பி. சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
12 ஆம் வகுப்பு படிக்கும் முஸ்கன் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணை, அவரது தந்தை ஜுல்ஃபாம் மற்றும் 15 வயது சகோதரர் ஆகியோர் தங்கள் வீட்டின் மேல் தளத்திற்கு அழைத்துச் சென்று, துப்பாக்கியால் சுட்டு ஆணவக் கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் ஜுல்ஃபாம் மற்றும் அவரது மைனர் மகன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. தெரிவித்தார். இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்,
மேலும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க :பட்டியல் சாதியினர் குறி.. குழு குழுவாக பிரிந்து மதமாற்றம்.. முக்கிய நபரை தூக்கிய போலீஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com